Monday, June 17, 2019

ஊழல் பத்தி பேச பார்பணியத்துக்கு எந்த அருகதயும் கெடையாது

கலைஞர்,

2001 ல ஆட்சி இழந்து, ஒரு மாதம் கழித்து கைது. மனிதாபிமானம், சட்டம், ஒழுங்கு, முறை,  இப்படி ஏதாச்சும் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் கூட அந்த கைது நடந்திருக்க கூடாது. இதை நா சொல்லல. அந்த வழக்கை விசாரிச்ச நீதிபதி சொன்னாரு.

முந்தைய ஆட்சியில் சஸ்பெண்ட்ல இருந்த ஒரு அதிகாரி.. கார்ப்பரேஷன் கமிஷனர்... பேரு ஆச்சரெயளு.. கண்டிப்பா பார்பனரா தான் இருக்கணும். இல்லாட்டியும் ஜெயலலிதா சொல்லி தான் இதெல்லாம் நடந்தது.

அன்றைய தேதிக்கு பாலம் கட்டுறதுல 12கோடி ஊழல் னு இந்த ஆச்சரெயலு ஒரு fir கொடுக்குறாப்ல... வெள்ளிக்கிழமை சாயுங்காலம் 9 மணிக்கு. சனி அதிகாலை 1.30 மணிக்கு அர்ரெஸ்ட். அதாவது ஒரு சாதாரண கார்பொரேஷன் கமிசனர் கொடுத்த புகாருக்கு நம்ம ஸ்காட்லாண்ட் யார்ட் ராத்திரி போய் ஒரு முன்னாள் முதல்வரை, ஒரு MLA(அவர் வயசெல்லம் பத்தி கூட பேச வேண்டாம்) அர்ரெஸ்ட் பண்றாங்கா.  சன் டிவி நல்லா இந்த சம்பவத்தை வெச்சு trp ஏத்துனாங்க, ஆனா அதையும் தாண்டி இந்த பார்ப்பனிய அரசு எந்திரம் எப்படி எந்த எல்லைக்கும் போகும்னு வெளிய காட்ட அது உதவியா இருந்துச்சு. கூடவே மத்திய மந்திரி யா இருந்த முரோசோலி மாறன், இன்னைக்கு எங்க தொகுதி MP TR. பாலு 🔥🔥🔥, (எனக்கு அன்னைக்கு தான் பாலு யாருன்னே தெரியும், நா அப்ப 11 வகுப்பு)அன்னைக்கு அவர் மத்திய மந்திரி, அவரும் அரேஸ்ட் செய்ய படுகிறார்கள். அப்ப மேயர் ரா இருந்த ஸ்டாலின் நீதிமன்றத்தில் சரண் அடஞ்சார். திமுக தொண்டர்கள் பல ஆயிரம் பேர் அர்ரெஸ்ட்.

பொது மக்கள் பல பேருக்கு குழப்பம். ஊழல் செஞ்சுட்டாங்க அதனால ஜெயா அதிரடி னு ஒரு பக்கம் ஊடகம் வேலை செய்யுது, அத பாத்து சந்தோச படுறதா இல்ல இவ்ளோ பெரிய அதிகாரம் இருக்க அவருக்கே இவ்ளோ தான் மரியாதையானு பயப்புடுறதானு... ஏன்னா அப்ப மத்திய அரசு பாஜக கிட்ட, கூட்டணில திமுக இருந்துச்சு...

அப்ப எனக்கும் பெருசா ஒன்னும் புரியாது, 16 வயசு பையனுக்கு பார்ப்பனியம் பத்தி என்ன தெரிய போகுது. ஏதோ நடக்குதுனு நானும் கடந்து போய்ட்டேன். அப்ப அரசியல்ல அவ்ளோ ஆர்வமும் கிடையாது.

நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு வருது. அந்த நீதிபதி எல்லாரையும் வெச்சு செய்யுறாரு. கலைஞர் இறந்த அப்ப ஏதோ ஒரு முகநூல் பஞ்சாயத்துக்காக, அவர ஊழல் வாதினு சொல்லி ஒரு கமெண்ட்கு பதில் சொல்ல இந்த விஷயத்தை படிச்சேன்...

அந்த நீதிபதி கேட்ட கேள்விகள்..

அந்த ஆச்சரேயலு அந்த பதவிக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குள்ள அவருக்கு எப்படி ஊழல்னு குற்றம் வெக்குற அளவுக்கு இவ்ளோ விஷயம் தெரியும்? கண்டிப்பா முன்பகை(2000 வருஷ பகைன்னு படிக்கவும்)

நேரா cbcid கிட்ட எதுக்கு புகார்? Chief secretary கிட்ட தான புகார் கொடுக்கணும்?

அந்த பாலம் கட்டுனதுல ஈடுபட்ட எந்த engineer கிட்டயும் கலந்தாலோசிக்காம எப்படி இவரே ஒரு முடிவுக்கு வந்தாரு?

முக்கியமான விஷயம், அந்த குற்றத்துல ஈடுபட்ட முக்கிய குற்றவாளி யாருன்னு வாதுடன வக்கீலுக்கே தெரியல! அர்ரெஸ்ட் பண்ண policeகும் தெர்ல, இன்னும் ஏன் fir கொடுத்த நம்ம ஆச்சரெயலு கே தெர்ல... ஆனா முதல் அர்ரெஸ்ட் கலைஞர்...

FIR பதிவு செய்த விதம், charge sheet file செய்யாமல் அர்ரெஸ்ட் செய்த விதம், அர்ரெஸ்ட் கு முன்னாடி நீதி மன்றம் தான் பிடி வாரண்ட் தரணும்.. இப்படி எந்த அரசியல் சாசனம் சொல்ற விஷயத்தையும் கண்டுக்காம எப்படி அர்ரெஸ்ட் பண்ணீங்க?

இதெல்லாம் தான் அந்த நீதிபதி கேட்ட முக்கிய கேள்விகள், இன்னும் நெறய வெச்சு செஞ்சாப்ல பட் எனக்கு அதெல்லாம் புரியல...

ஆனா மேல சொன்ன எதுவும் இங்க யாருக்கும் தெரியாது. ஊடகத்துல பெருசா வந்துச்சானு எனக்கும் தெர்ல.

ஆனா இது நடந்து 17 வருஷம் கழிச்சு ஒரு முகநூல் பஞ்சாயத்துல யாரோ ஒரு சில்வண்டு இந்த அர்ரெஸ்ட் பத்தி பேசி , இதை வெச்சு கலைஞர் ஊழல்வாதி,  அவர் மட்டும் தான் உலகத்துலேய பெரிய ஊழல் வாதி, தீவு வாங்கிட்டாரு, 10000 கோடி சொத்துனு சொல்றான்.

இந்த ஒரே ஒரு அர்ரெஸ்ட் மட்டும் தான் அவன் இதுக்கெல்லாம் சொன்ன சாட்சி.  இது உண்மை இல்லைனு சொல்றதுக்காக மட்டும் தான் நானே இந்த விஷயத்தை பத்தி google பண்ணி படிச்சேன். அப்ப தான் எனக்கே புரிஞ்சது இங்க ஊழல் னு எவனாச்சும் வந்தா அவன் கண்டிப்பா ஒரு ovop னு

இங்க ஊழல் னு சொன்னாலே கலைஞர், லல்லு பிரசாத், மாயாவதி னு தான் எல்லாரும் சொல்வாங்க. அப்படி தான் இந்த பார்ப்பனிய ஊடகம் பிம்பத்தை உருவாக்கி இருக்கு. இவங்கெல்லாம் ஊழல் பண்ணலையா னு கேட்டா, கண்டிப்பா பண்ணி இருப்பாங்க. ஆனா இவங்க மட்டும் ஏன் டார்கெட் செய்ய படுறாங்க. அது தான் நாம யோசிக்க வேண்டிய விஷயம். அங்க தான் எல்லா அரசியலும் இருக்கு. இவங்க எல்லாருமே ஏதோ ஒரு பாயிண்ட்ல பார்ப்பனீயத்தை நேருக்கு நேரா எதிர்த்தவங்க... நமக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா பார்ப்பனிய பர்னீச்சர உடைச்சவங்க...

பார்ப்பனியம் தான் ஊழலுக்கு முக்கிய காரணம். இதை பத்தி பல தடவை எழுதியாச்சு. ஆனா எவனும் இதை பத்தி பேசவே மாட்டான். கேட்டா எங்கள மட்டும் குறை சொல்லாதேல் னு ஓடிடுவான்...

உதாரணத்துக்கு ஹிந்து N.Ram 2017 ல ஒரு கட்டுரை எழுதுராறு, தமிழக அரசியல்ல ஊழல்.. இது தான் தலைப்பு... . கலைஞர் பத்தி ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஹெவியா வும், சொல்றதுக்கு ஆயிரம் விஷயம் இருக்குற MGR JJ பத்தி பல்லு படாமலும்.  ஊடகம் பார்ப்பனியம் கைல இருக்குற வரைக்கும் இதை நம்மால் உடைக்கவே முடியாது. அதுக்கு இது தான் example.

உலகத்துல தேர்தல் அரசியல்ல ஊழல் இல்லாத ஒருத்தனும் இல்லை. அரசு நடத்தனும் என்றாலே ஊழல் செஞ்சு தான் ஆகணும். அதனால ஊழல் வெச்சு மட்டுமே ஒருத்தரை மட்டம் தட்டுனா ஒன்னு அவன் இந்த விஷயம் எல்லாம் தெரியாத அறைவேக்காடு, இல்ல அவனுக்கு எல்லாம் தெரிஞ்சு வேணும்டே சொல்ல வேற பாயிண்ட் இல்லாம அடிக்குறான். இவ்ளோ தான் இந்த ஊழல் சுத்தி இருக்குற அரசியல்.

கலைஞர். ரெண்டு மூணு விஷயத்துல விமர்சனம், கோவம், கடுப்பு, எல்லாம் இருக்கு அவர் மேல. கண்டிப்பா எதிர் காலத்துல அவர் செயலை விமர்சனம் எல்லாம் செய்வேன். அது என் உரிமை. அவர் செஞ்ச நல்ல விஷயங்களும் இருக்கு. நெறயவே இருக்கு. அதை பத்தியும் கண்டிப்பா பேசுவேன்.

ஆனா இன்னைக்கு அவர் பிறந்த நாள் அன்னைக்கு அவரை ஊழல்வாதினு சொல்லி, ட்விட்டர் ட்ரெண்ட் பண்ற பாஜகா, பார்ப்பனியம் முன்னாடி அவரை விட்டு கொடுக்க எனக்கு அவசியம் இல்லை.

ஊழல் பத்தி பேச பார்பணியத்துக்கு எந்த அருகதயும் கெடையாது. இந்த அயோக்கய பசங்க அதிகாரத்துல இல்லனா இங்க ஊழல் னு ஒன்னு இருக்கவே இருக்காது.  இதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அரசியல் என்பது அறம் சார்ந்த செயல்.
இவ்ளோ தான் எனக்கு தெரிஞ்ச அரசியல்.

1. பார்ப்பனிய ஊழல்
https://m.facebook.com/story.php?story_fbid=163367031361909&id=100030658393441

2. பல்லு படாமல் N.Ram

https://scroll.in/article/851760/how-did-political-corruption-begin-in-tamil-nadu-n-ram-has-some-answers

3. 2001 கலைஞர் கைது

https://frontline.thehindu.com/static/html/fl1814/18140040.htm

No comments: