Thursday, June 20, 2019

ஆதி திராவிடர் பெயர் காரணம்

ஆதி திராவிடர் பெயர் காரணம் !
*பறையர்,பள்ளர் போன்ற*
*தமிழ் குடிகளை #ஆதித்தமிழர் என அழைக்காமல் #ஆதிதிராவிடர் என
*ஏன் அழைக்கிறார்கள்?*
இதுதான் திராவிடம்
செய்த சதி என சிலர்
வரலாற்றை திரித்து
கதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன?
பிரிட்டிஷ் இந்தியாவின் கால கட்டத்தில் மதராஸ் மாகாண சட்டசபையில்
20 ஜனவரி 1922ல் M.C.ராசா
சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தின்படி
#பறையர், #பள்ளர் என்ற பெயர்
நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற
பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் (25.03.1922) பறையர், பள்ளர் மக்களுக்கு #ஆதிதிராவிடர் எனப் பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.
பெயர் மாற்றம் செய்யப்பட்டு
2ஆண்டுகளாகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது.
இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலைசீனிவாசன் 25.08.1924ல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.
இந்த காலகட்டத்தில் (1925 வரை) பெரியார் காங்கிரசில் இருந்தார்.
நீதிகட்சி 'ஆதிதிராவிடர் 'என பெயர் மாற்றிய தீர்மானத்திற்கும்
பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
1892ல் ஆதி திராவிடர் என்ற வார்த்தையை பதிவு செய்தவர் அயோத்திதாசர்.
1.12.1891ல் பண்டிதர்அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார்.
அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரஸ்கட்சிக்கும் அனுப்பிவைத்தார்.
1892ல் அதை
"ஆதிதிராவிட மகாசன சபை" எனப்
பெயர் மாற்றி பதிவும் செய்தார்.
இதனை அடிப்படையாக கொண்டு நீதிக்கட்சி ஆட்சியில்
1922ல் பள்ளர், பறையர் என அழைக்கப்பட்ட சாதிகளுக்கு "ஆதிதிராவிடர் " என அரசு அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியது.
M.C.ராஜா பட்டியல் சமூகத்தை சார்ந்தவர். அவர் தன்னுடைய சமூகத்தின் பெயரை எப்படி அழைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து முடிவெடுத்தார்.
அதற்கு உறுதுணையாக இருந்தது
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.
எதிர்காலத்தில் நீதிகட்சியிலிருந்து திராவிடர்கழகம் பிறக்கும் என்ற ஜோசியத்தை M.C.ராஜா அறிந்திருக்க வாய்ப்பு இல்லை
வரலாற்றை திரிக்கும் சிலர் சொல்வதுபோல ஆதி திராவிடர் என்ற பெயர் திராவிட கழகங்களால் கொடுக்கப்படவில்லை.
1891ல் அயோத்திதாசரால்
கொடுக்கப்பட்ட பெயர்.
அப்போது பெரியாருக்கு வயது 12.
'ஆதி திராவிடர்' என பெயர் மாற்றும்போது இந்தியா என்ற ஒரு சுதந்திர நாடே அப்போது கிடையாது. தமிழ்நாடு என்றவொரு
மாநிலமும் அப்போது இல்லை.
திராவிட கட்சிகள் அப்போது
பிறக்கவே இல்லை.
அப்போது பிறக்காத திராவிட இயக்கங்களை இழுத்து அவர்கள்தான் ஆதித்தமிழருக்கு ஆதி திராவிடர் என பெயர் சூட்டியதாகப் பொய்யை சொல்லி வரலாற்றை திரித்து அரசியல் செய்வது தற்போது நடக்கிறது.

1 comment:

கமுதி தீனா said...

இதை போஸ்ட் பண்ணுனதே 2019 ல தானடா ஏன்டா வரலாறை மாத்துறீங்க ஆதி தமிழன் எப்படிடா திராவிடன் ஆனான் முட்டாள்களா