Friday, June 21, 2019

வாள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள்

கேள்வி:
"பார்ப்பனர்களுக்கென 'Brahministan' என்னும் பெயரில் ஒரு தனி நாடு வேண்டும் என்றக் கோரிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
பதில்:
உண்மையில் பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த தேசம் ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் என் கருந்து.
காரணம், ஒருவன் தன்னைப் பார்ப்பனனாகக் கருதிக்கொள்கிறான் என்றால் அவன் இந்து வேதங்களின்படி தன்னை பிறப்பால் உயர்ந்தவன் என்று நம்புகிறான் என்றுப் பொருள்.
வேதங்களின்படியும், மனுநீதியின்படியும் சமூகத்தில் மந்திரம் ஓதுவது, கோயிலில் மணியாட்டிப் பிச்சை எடுப்பதுப் போன்ற பணிகள் மட்டுமே தனக்குரியவை என்றும், மற்ற உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் அனைத்தும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு உரியவை என்றும் நம்புகிறவன் என்றுப் பொருள்.
இப்படி ஒரு உழைப்புக்கு அஞ்சும் கையாலாகாத அயோக்கியக் கும்பலால் எப்படி ஒரு நாட்டை கட்டியெழுப்பமுடியும்? ஏற்கனவே உருவான ஒரு நாட்டைக் கொடுத்தால் அதிலாவது இவர்களால் இயங்கமுடியுமா?
இவர்கள் கேட்கும் பார்ப்பனர்களுக்குரிய தனிநாட்டில் வயலில் இறங்கி உழப்போவது யார்? துணியை நெசவு செய்யப்போவது யார்? கட்டிடங்களைக் கட்டப்போவது யார்? உடல் நோக உழைக்கப்போவது யார்? மலம் அள்ளப்போவது யார்?
உழைப்பு இல்லாமல் எப்படி ஒரு நாட்டை உருவாக்கமுடியும்? கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களின் உழைப்பில் நோகாமல் உட்கார்ந்து உண்டுக்கொழுத்த தண்டக் கருமாந்திரங்களுக்கு தனிநாடு ஒருக் கேடா?
"இல்லை இல்லை.. கடுமையாக உழைக்கும் பணிகளை செய்வதற்கு பார்ப்பனரல்லாதவர்களை இங்கிருந்து அழைத்துக்கொள்வோம்" என்று அவர்கள் சொல்வார்களேயானால், "உங்களுக்கு உழைக்கப்பதற்காக பார்ப்பனரல்லாத மக்கள் வேண்டும் என்றால், இந்தியாவிலேயே அப்படித்தானே சுரண்டிப் பிழைக்கிறீர்கள். பிறகு என்ன மயித்துக்கு தனிநாடு வேண்டும்?" என்றக் கேள்வி எழும்.
"இல்லை இல்லை. நாங்களும் எங்கள் நாட்டில் உயர்வு தாழ்வு பார்க்காமல் சமத்துவமாக அனைத்துப் பணிகளையும் செய்வோம். உடல்ரீதியாக உழைப்போம்" என்று அவர்கள் சொல்வார்களேயானால், "பிறகு எப்படி நீங்கள் பார்ப்பனர்கள்? அந்த வெங்காயத்தை இங்கேயே செய்யலாமே? சமத்துவம் தழைக்குமே! அதைத்தானே திராவிட இயக்கம் சொல்கிறது?" என்றக் கேள்வி எழும்.
ஆக, எப்படிப் பார்த்தாலும் அவாள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள்.

No comments: