Thursday, June 20, 2019

குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்னு ஜோசியம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்

முகநூல் நண்பர் ஒருத்தர் தனக்கு தேவதை பிறந்திருக்கான்னு போஸ்ட் போட்டிருந்தார். எப்பவுமே இந்த மாதிரி போஸ்ட் போட்டா வாழ்த்துகள் சொல்லிட்டு நகர்ந்துடுவேன். ஆனா அதே போஸ்ட்ல கமெண்ட்ல தன் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்னு ஜோசியம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்னு கமெண்ட் போட்டிருந்தார். நம்ம வாய் சும்மா இருக்காதே. கீழ இருக்கிறதை கமெண்ட்டா போட்டுவிட்டுட்டு வந்துட்டேன் 😝 அவரு வந்து பார்த்துட்டு ப்ளாக் பண்ணிக்கட்டும் 🤣🤣
பொறந்து முழுசா 12 மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ல அவங்க எதிர்காலம் தெரியனுமா? சரி எனக்குத்தெரிஞ்ச எதிர்காலம் சொல்லட்டுமா?
உங்க பாப்பா கொஞ்ச நாளைக்கு படுத்துட்டு மட்டும் இருப்பாங்க. பாத்ரூம்லாம் அவங்க அறியாமயே போயிடுவாங்க. நீங்கதான் ஆய் கழுவிவிடனும். கொஞ்சநாள் கழிச்சு தவழுவாங்க. அவங்களுக்கு நீங்கதான் நடக்க சொல்லிக்கொடுக்கவேண்டி இருக்கும். அப்புறம் நடப்பாங்க. பேச ஆரம்பிப்பாங்க. தமிழே தடுமாறும், நீங்கதான் அதையும் சொல்லித்தரவேண்டியிருக்கும்.
அப்புறம் ஓடுவாங்க, பாடுவாங்க, ஆடுவாங்க. ஸ்கூல் போவாங்க, திங்கள்கிழமை ஸ்கூல் போக அடம்பிடிப்பாங்க. அப்புறம் பெரியமனுஷி ஆவாங்க. அவங்க விருப்பப்படியோ இல்ல விதியேன்னு உங்க விருப்பப்படியோ கல்யாணம் பண்ணுவாங்க. புருஷன் கூட சண்டைப்போடுவாங்க, அவங்களும் குழந்தை பெத்துப்பாங்க.
அவங்களும் குழந்தையோட எதிர்காலம் தெரியனும்னு போஸ்ட் போட்டா, மீதியை அவங்ககிட்ட சொல்லிக்கிறேன். 🤣🤣

No comments: