Monday, June 17, 2019

திமுக மீது பொய் பிரச்சாரம் செய்பவர்கள் கவனத்திற்கு.!

திமுக மீது பொய் பிரச்சாரம் செய்பவர்கள் கவனத்திற்கு.!

பொதுவாக மதுவிலக்கு பற்றி பேசினால் திமுகவினர் மது ஆலையை மூட வேண்டும் என்று பொது பிரச்சனையை மடைமாற்றுவது!

அதே போல் ஹிந்தி திணிப்பை பேசினால் திமுகவினர் நடத்தும் பள்ளிகளை மூடுவார்களா ?என்று பொது சமுதாய பிரச்சனையை மடைமாற்றி வலுவிழுக்க வைக்க செய்யப்படும் இந்தியத்தின் அதன் ஏஜெண்டுகளின் பிரச்சார யுக்தி!

பொய் பிரச்சாரம்!

துணிவோடு சொல்லலாம் அரைநூற்றாண்டாக அவர்களும் பேசிவருவது தான், கச்சத்தீவை கலைஞர் தாரை வார்த்துட்டார் ன்னு அப்பட்டமான பொய் பிரச்சாரம்,
* அப்பொழுது அன்னை இந்திராகாந்தி பிரதமர் என்பதை பேசமாட்டார்கள்!
*தமிழகத்தில் நெடுமாறன் காங்கிரஸ் தலைவர் என்று பேசமாற்றார்கள்! *கலைஞரின் "சட்டமன்ற தீர்மானம்"      எழுப்பியதை பேசமாட்டார்கள்!
*மக்களை திரட்டி கலைஞர் கண்டன குரல்  நிறைவேற்றியதை பேசமாட்டார்கள்!

கலைஞர் கொடுத்துட்டார்! கலைஞர் கொடுத்துட்டார்! என்று மட்டும் கோஷம்.

ஹிந்து எதிர்ப்பு போராட்டம் பற்றி பேசும் போது அவர் குடும்பம் மட்டும் படிச்சுட்டு நம்மளை படிக்காம தடுத்துட்டாங்க ன்னு இருட்டடிப்பு புரளி பேசுவாங்க!
*ஹிந்தி திணிப்புக்கு எதிரான யுத்தம் 1937இல் தொடங்கியதை பேசமாட்டாங்க! *பெரியார் நாடெங்கும் புரட்சி தீயை பற்றவைத்தார் என்பதை பேசமாட்டாங்க! *ஹிந்தியால் பல மொழிகள் அழிந்ததை பேசமாட்டாங்க! (ராஜஸ்தானி, குஜராத்தி, ஓடிய மொழி, பெங்காலி, மராட்டி, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) *ஹிந்தியால் என்ன லாபம் நமக்கு என்றால் அதையும் சொல்லமாட்டார்கள்!

மது விலக்கு கலைஞர் தான் தமிழகத்தில் மது வை கொண்டுவந்தார் என்று பேசுவார்கள் அதாவது அதற்கு முன்பு தமிழகத்தில் அதாவது மதராஸ் மாகாணத்தில் மதுவே இல்லை என்று சொல்வார்கள்!
*கலைஞர் மதுவை பொருளாதாரத்தை சீர்படுத்த கொண்டுவருகிறோம் என்று சட்டசபையில் சொல்லிவிட்டு கொண்டு வந்து சரியாக இரெண்டே வருடத்தில் தமிழகம் முழுதும் மது கடைகளை இழுத்து மூடினார்! மறுக்கமுடியுமா?
*பிறகு டாஸ்மாக் கை உருவாக்கியது யார்? *டாஸ்மாக் எலைட் டை பரவலாக்கியது யார்? என்று கேட்டால்? நீங்க என் மூடல ன்னு கலைஞரையே திரும்ப கேட்பார்கள்!

"மது ஒழிப்பு சம்பந்தமாக சமீப காலங்களில் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்த நிகழ்வு என்று பார்க்கும் பொழுது "குடித்து விட்டு பள்ளிமாணவர்கள் சீருடையில் விளையாடும் விடியோவும்" "ஒரு சிறுவனுக்கு யாரோ ஊற்றி கொடுப்பது போன்ற விடியோவும்" இணையமொழியில் சொல்வதென்றால் வைரல் ஆனது, அதன் பின்பு அதன் வீரியத்தால் பூரண மதுவிலக்கு தேர்தல் அறிக்கையாக திமுக வைத்து பிறகு தேர்தலில் தோற்றது வரலாறு!"

அதே போல் 7 பேர் விடுதலை இப்பொழுது திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியபொழுது இத்தனை நாள் என்ன பண்ணினீங்க ன்னு கேள்வி கேப்பான் சீமானின் பொடியன்கள்?

"எளிதில் சொல்லவேண்டும் என்றால் தண்டனையாக 25 ஆண்டுகள் சிறையில் அனுபவித்து இருக்கிறார்கள், இனி எடுக்கும் முயற்சி எல்லாம் மனிதாபிமான விடுதலை முயற்சியே அதை தான் இப்பொழுது திமுக முன்னெடுக்கிறது"

கடந்தமுறை தவிர்த்து பிந்தைய ஆண்டுகள் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்தது, சரியான பாதையில் தமிழகம் பயணிக்க தொடங்கிய பொழுதெல்லாம், போலி- பொய் பிரச்சாரங்கள் ,அனுதாபங்களால் ஜெயா ஆட்சிக்கு வருவார், ஜெயாவின்/அதிமுகவில் ஒரே திட்டம்!? திமுகவின் திட்டங்களை நிறுத்துவது அல்லது கிடப்பில் போடுவது எதுவும் செய்யமுடியாது என்று தெரிந்தால் ரிப்பன் வெட்டி திறந்து நான் தான் என்று அடிமைகளைவிட்டு புகழ்ப்பாடி கொள்வது!

அப்படி பாடிக்கொண்டவை
1.மெட்ரோ ரயில்
2.கோயம்பேடு பேருந்து நிலையம்
3.காவேரி தாய்
4.ஈழத்தாய் போன்ற சாதனைகள்

அப்படி நிறுத்தியவை/கிடப்பில் போடப்பட்டவை
1.பறக்கும் ரயில் திட்டம் (மதுரவாயல்)
2.புதிய தலைமை செயலகம்
3.அண்ணா நூலகம்
4.கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம் போன்றவை முத்தாய்ப்பானவை !

அதே போல் மீத்தேன் ஸ்டாலின் தான் கையெழுத்து போட்டார்! போட்டார்! என்று இருட்டடிப்பு பிரச்சாரம், ஆனால் உண்மையில் நடந்தது ஏற்கனவே எண்பதுகளில் இருந்து ongc தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எண்ணெய் மத்திய அரசால் எடுத்து வருகிறார்கள், அதே போல் தஞ்சை மாவட்டத்தில் புதிய நிறுவனம் எண்ணெய் எடுக்க தகுதியான இடமா? என்று கண்டறிய ஆய்வுக்கான பணிக்கு கையப்பம் இட்டார்! அது ரெண்டே வருடத்தில் காலாவதியும் ஆனது!

அந்த ஆய்வு பணிக்கு கையப்பம் திட்டத்திற்கும் கூட வருத்தம் தெரிவித்தார், அந்த திட்டம் நன்மையா? தீமையா? என்று எப்படி தெரிந்து கொள்வது ஆய்வு இல்லாமல் அதற்கு திமுகவை குற்றம் சாட்டுகிறார்கள்!

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன் காமராஜர் ஆட்சி காலத்தில் ஹெலிஹாப்டர் மூலம் கருவேல மர விதைகளை தூவ செய்யதார்- நல்லெண்ணத்தில் ஆடுமாடுகளாவது உண்ணட்டும் என்று! இன்று நிலைமை? அந்த கருவேல மரங்களை ஒழிக்க பல இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், அரசாங்கம் என்று எல்லாம் போராடுகிறோம்!
காரணம்? ஆய்வு செய்யாமல் தன்னிச்சையாக செய்த முடிவு அன்றைக்கு நல்லதாக பட்டது இன்று தவறானது அதே போல் ஆகிவிட கூடாது என்பதற்காக கூட மீத்தேன் திட்ட ஆய்வுக்கு கையெழுத்து இட்டு இருப்பதாக நினைக்கிறோம்!

பாலக்காடு/குடகு/மூணாறு/ தேவிகுளம் பீர்மேடு போன்ற பகுதிகள் யாரால் எந்த தமிழக முதல்வரால் எடுத்து கொடுக்கப்பட்டது என்பதையும் சொல்லமாற்றார்கள்,வேறு நாட்டிற்கு கச்சதீவை கொடுத்தது கலைஞர்! சொந்தநாட்டில் பக்கத்து மாநிலத்துக்கு நம் நிலப்பரப்பை உண்மையில் கொடுத்த முதல்வரை ,"மேடாவது பள்ளமாவது எல்லாம் இந்தியாவுக்குள் தான் இருக்குதுங்குறேன்" ன்னு சொன்னவரை பற்றி பேசவே மாட்டோம் எவ்வளவு காழ்ப்புணர்வு? கலைஞர் மேல்!

ஒரு ஒரு விஷயமாக சொல்லலாம் கலைஞரால் தான் அவரால் மட்டுமே தமிழகம் இந்த அளவு முன்னேறி இருக்கிறது என்று!

அப்புறம் ஊழல் ஊழல் ன்னு சொல்லுவாங்க சட்டமன்றத்தில் பொன்விழா கொண்டாடிய தலைவர், பொதுவாழ்வில் வருடங்கள் இருந்த தலைவர்,ராஜாஜி காலத்தில் இருந்து கிருஷ்ணசாமி சீமான் காலம் வரை எவ்வளவு குற்றச்சாட்டுகள் அவர் மீதும் அவரை சார்ந்தோர் மீதும், பாவம் பேசியவர்களுக்கெல்லாம் ஆதாரம் மட்டும் கிடைக்கவில்லை, எந்த வழக்கும் போட 60 வருடமாய் முடியாமல் இன்னும் அதே பேசிக்கொண்டு இசுசுசு கார் ரில் களமாடி வருகிறார்கள்!?

சமூக அரசியல் மக்களுக்கானது அதை ஒரு வலிமையான இயக்கம் முன்னெடுக்கும் பொழுது அதை குற்றம் சொல்லி/ பொய் சொல்லி /அவதூறு பேசி என்ன சாதிக்க போறீங்க?

*மதுவிலக்கு கொண்டு வந்தால் நீங்கள் சொல்லும் திமுகவினர் தானாக மூட போறாங்க,
*cbse பள்ளிகள் இவ்வளவு அதிகமாக (ஏறத்தாழ 700 பள்ளிகள் தமிழகத்தில் ) காரணம் ,சமசீர் கல்வியை தோற்கடிக்க ஜெயாவால் தமிழகத்தில் பரவலாக்க பட்டதே ஒழிய வேறெதற்காகவும் இல்லை ! Std 1இல் இருந்து 12வரை தமிழ் பாடமொழி கட்டாயம் என்று அரசாணை கொண்டு வந்தது திமுகதான்!

நாளை ஆட்சிக்கு வந்தா CBSE க்கும் பட்டி பார்க்கப்படும் என்ற அச்சத்தாலே தான் "மந்தி"யர்கள் கூக்குரலிடுகிறார்கள்!

சமூக அரசியல் வேறு! தொழில் வேறு!
சமூக அரசியல் பரவலாக்கப்பட்டால் தானாக தொழில் அது சார்ந்து மாறும் இயல்பாக!

கிருஷ்ணசாமி சீமான் எல்லாம் ஹிந்திக்கும் மும்மொழி திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பொழுதே நாம் விழிப்படைய வேண்டாமா ?

உறுதியாக சொல்வேன் திமுகவால் தான் ஸ்டாலின் அவர்களால் தான் மீண்டும் தமிழகத்தை பொலிவுற செய்ய இயலும் அதுவரை நீங்க குழப்பி மக்களையும் குழப்பிக்கொண்டே இருங்கள்!

அனைத்தையும் முறியடித்து ஹிந்திக்கு உறியடிப்பார்கள் திமுகவினர்! ✍🏼🌹💥💥💥

உடன்பிறப்பே முடிந்த வரை காப்பி பேஸ்ட் செய்யுங்கள் நன்றி 🙏🙏🙏

No comments: