Friday, June 21, 2019

திராவிடர் என்பதற்கு பதிலாக தமிழர்கள் என்று ஏன் வழங்கக் கூடாது

திராவிடர்  என்பதற்கு பதிலாக தமிழர்கள் என்று ஏன் வழங்கக் கூடாது என்று சிலர் கேட்கிறார்கள் . தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள்  தாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.

நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம், வளர்கிறோம், தமிழே பேசுகிறோம், தமிழ்நாட்டிலேயே இருக்கிறோம் அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர் அல்லர் என்று நீங்கள் கூறமுடியும் ? என்று கேட்கிறார்கள்.

ஒருகாலத்தில் தமிழர் என்பது  தமிழ் ( திராவிட)ப் பண்புள்ள மக்களுக்கு  அரிய பெயராக இருந்திருக்கக் கூடுமானாலும் - இன்று அது மொழிப் பெயராக மாறிவிட்டிருப்பதால் அம்மொழி வேதம் ஆரிய பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்து விடுகிறார்கள்.
அத்தோடு ஆரியப்பண்பை நம்மீது சுமத்த அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்.

அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் நாம் சூத்திரர்களாகிறோம். ஆகவே, நம் கூட்டத்திலிருந்து அவர்களை விலக்கிப் பேசித்தான், நம்மை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மில் தமிழன் என்று சொல்லும் - ஏமாளிகளைத்தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமே ஒழிய , திராவிடர் என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது .

சிதம்பரத்தில் 29.9.1948 இல் சொற்பொழிவு.

No comments: