Saturday, June 22, 2019

*திராவிடமும் அணைகளும்*

*திராவிடமும் அணைகளும்*



தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை பெருசாகும் போதெல்லாம்
காமராசர் அணைக்கட்டினார்
காமராசர் அணைக்கட்டினார்
என்று அள்ளிவிடுவோர் யாருக்கேனும் அவர் எத்தனை அணைக்கட்டினார் என்று தெரியுமா என கேட்டால்...

நிச்சயம் தெரியாது.
நாமே அதையும் சொல்லுவோம்...
எப்படி?
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ, ஆதாரப்பூர்வ இணையதளத்தின் வழியே...
காமராசர் 9 வருடம் முதல்வராகயிருந்தார். அவர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தான் இங்கே சிவப்பு வண்ணத்தில் கட்டம் போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.



சரி, அப்போ திமுக/அதிமுக என்ன செய்தது?
இங்கு இணைக்கப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ள வருடங்களை படித்துப்பார்த்தாலே எளிதில் தெரிந்துவிடும்
திமுக மட்டுமே 36 அணைகள் கட்டியுள்ளது.
நான்காவது புகைப்படம் *காவேரிக்கு குறுக்கே மட்டும் இதுவரை கட்டிய அணைகளின் விபரம்* தருகிறது.
தமிழ்நாடு காவிரியில் வெள்ளம் வரும்போதெல்லாம் வீணாக்கிவிடுகிறது. எல்லாமே கடலில் தான் போய் சேர்கிறது. தடுப்பணைகளே இல்லை என்றும் ஒரு அறிவில்லா புலம்பல் இருக்கிறது.
அப்படியா? என்று அதையும் ஆராய்ந்துப் பார்ப்போம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் முதல் திருச்சி வரை காவேரி குறுக்கே உள்ள அணைகள் விவரம்.
மேட்டூர் அணை முதல் கல்லணை (டெல்டா ஆரம்பம்) வரை 14 அணைகள் உள்ளன.
இதில் காலிங்கராயன் அணை மட்டும் பவானி காவேரி ஆற்றில் கலக்கும் இடத்தில் உள்ளது.
மற்ற அணைகள் அனைத்தும் காவேரி குறுக்கே உள்ளது.
மேட்டூர் முதல் திருச்சி வரை 210கிமீ நீளம் உள்ள ஆற்றில் 13 அணைகளில் தான் தலைக்காவேரிலிருந்து வரும் நீரை சேமிக்கப்படுகிறது.
சேலம்,
ஈரோடு
நாமக்கல்,
கரூர்
மாவட்டங்கள்
காவேரி டெல்டா மாவட்டங்களான
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்தை விட மேட்டில் உள்ளதால் *(9)* தடுப்பு அணைகள் இந்த மாவட்டங்களில் கடந்த முப்பது ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது!
இதில் விவசாயம் (குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு), குடி தண்ணீர் தேவை மற்றும் மின்சார தேவைக்கு தண்ணீர் சேர்த்து வைக்கப்படுகிறது!
*காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தான் இந்த அணைகளுக்கு முறையாக தண்ணீர் வரும்!!*
கல்லணை அடுத்து காவேரி பல நதிகளாக பிரிந்து கடலில் கலக்கிறது. இந்த சின்ன சின்ன ஆறுகளிலும் நிறைய தடுப்பணை உள்ளது. அடுத்த கட்டமாக கொள்ளிடம் ஆற்றில் சில தடுப்பணை கட்டும் பணிகளும் நடந்து வருகிறது.
மேட்டூர் போல பிரம்மாண்ட அணை கட்ட புவியியல் இடம் மேட்டூரை தாண்டி தமிழகத்தில் இல்லை.
*தமிழகத்தில் அணைகள் இல்லை,யாரும் கட்டவில்லை என்று உங்களிடம் இனி எவனாவது பாடமெடுத்தால் தயங்காமல் செருப்பை தூக்கிக் காட்டுங்கள்.*
எல்லோரும் அறிய, பொதுவெளியில் இருக்கும் ஒரு விவரத்தை எடுத்து, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ததைப்போல இவ்வளவு எழுதுவதற்கு வெட்கமாகத்தான் இருக்கிறது.
ஆனால், பொதுவெளியில் இவ்வளவு விவரங்கள் இருக்கும்போதே இவ்வளவு கேவலமாக பொய் சொல்கிறார்களே, அதை நினைத்தால் இந்த தயக்கம் போய்விடுகிறது.

No comments: