Tuesday, June 18, 2019

இந்தி எதிர்ப்பு,தமிழ் வாழ்க ன்னு கத்துறியே நாயே

இந்தி எதிர்ப்பு,தமிழ் வாழ்க ன்னு கத்துறியே நாயே, உன் வீட்டு பிள்ளைகள் தமிழ் படிக்க தெரியுமா?
இப்போ உள்ள மாணவர்களிடையே தமிழ் ஒழுங்கா எழுத படிக்க தெரியுமா?
என்ன மயித்துக்கு இந்திய எதிர்ப்பு பிரச்சினை பண்ணுற??
இந்தி எதிர்ப்பு ன்னு உங்களுக்கு என்ன லாபம்?
இந்தி தெரியமால் நான் பட்ட கஷாயம் உங்களுக்கு தெரியுமா?
ஆங்கிலம் உள்ளே வந்து எல்லாம் நாசமா போச்சி..
இப்படி பல கசாயங்கள்.
கடைசியில், நீயெல்லாம் இந்திய விரோதி. ஜெய் ஸ்ரீராம் வரை.
அப்பாடா.. திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டது அவ்வளவு தவறா?
என் தாய் மொழி தமிழை அழிக்க வரும் இந்தியை எதிர்ப்பது தேச நலனுக்கு எதிரானதா?
நான் ஆங்கிலம் கற்று பல நாடுகள் பயணப்பட, சம்பாதிக்க ,சுற்றிப்பார்க்க ,என் வாழ்க்கையை அனுபவிக்க முயல்வது அவ்வளவு தவறா?
மொத்தத்தில் நான் முன்னேறி வருவதில் இந்த அடிமை ***** அவ்வளவு என்ன காண்டு..
-- இப்படி எதிர் குரல்.
அட போங்கடா. ஏதோ படிக்கிறோம். மார்க் எடுப்போம். எவனாவது வேலை கொடுப்பான்.. அப்படியே வாழ்க்கையை ஓட்டுவோம். இந்தியும் படிப்போம்.. பாஸ் பண்ணுவோம்.. நம்ம வாழ்க்கை அப்படி.. நாள பின்ன யாராவது அதை படிக்கல, இதை படிக்கல ன்னு சொல்லிற கூடாது..
எப்படியாவது காசை கட்டி படிப்போம்.
- இது பெரும்பாலோர் கருத்து..
கல்வி.. அதன் மூலம் வேலைவாய்ப்பு.. அதன் பின் வாழ்க்கை.திருமணம். குழந்தைகள். இறப்பு..இப்படி நமது வாழ்வின் எல்ல நிலையும் தீர்மானிப்பது. அரசும். அதன் கொள்கை முடிவும்.
இந்திக்கும் ,இன்றைய தமிழ் மொழி நிலைமைக்கும் சம்பந்தம் இல்லை..
இரண்டாவது, தாய் மொழி மீதான ஆர்வம், ஈர்ப்பு குறைந்தது ,மதிப்பெண் நோக்கிய கல்வி முறை..
அது முதலாளித்துவ ஆதிக்கத்தினால் வந்தது. வேலை வாய்ப்பை நோக்கிய கல்வி.
கடைசியில அரசின் தவறினால்.. சரியான கல்வி கொள்கை இல்லாதது.
அறிவார்ந்த சமூகம் இதை எதிர் கொண்டு, தாய்மொழி கொண்டு மீண்டு வரும்..
- பாலாஜி ராஜசேகர்.

No comments: