Sunday, June 16, 2019

தமிழரின் தலைவிதி! தோழர் உதயகுமாரின் பதிவு

தமிழரின் தலைவிதி!  தோழர் உதயகுமாரின் பதிவு

கூடங்குளம் அணுக்கழிவுப் பிரச்சினை தொடர்பாக இன்று (யூன் 15, 2019) சென்னையில்  நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு 'நாம் தமிழர் கட்சி' சார்பாக யாரையும் அழைக்கவில்லையா என்று பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மற்ற தலைவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது, தோழர் சீமான் அவர்களுக்கும் அந்தக்  குறுஞ்செய்தியை நான் அனுப்பினேன். 'பூவுலகின் நண்பர்கள்' தோழர் சுந்தரராஜன் கைப்பேசியில் அழைத்தபோது, தோழர் அழைப்பைத் துண்டித்திருக்கிறார். பின்னர் சுந்தர் தோழர் பாக்கியராசனை அழைத்திருக்கிறார். அவர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் தொடர்புக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தொடர்பு கொள்ளவில்லையாம். கட்சியின் முன்னணித் தலைவர் ஒருவரையாவது நிகழ்வுக்கு அனுப்பியிருக்கலாம். '

அதுபோல, நெல்லை மாவட்டத்தில் 'நாம் தமிழர் கட்சி' நடத்திய நிகழ்வுக்கு நான் போகவில்லை என்றும் சிலர் குறைபட்டுக்கொள்கிறார்கள். என்னை யாரும்  அழைக்கவே இல்லையே? எங்கே, என்ன நடந்தது என்று இப்போது வரை எனக்குத் தெரியாது!

நாம் தமிழர் கட்சி'  தம்பிகள் உரிமையோடும், கோபத்தோடும் என்னிடம் கேள்வி கேட்பதற்கு முன்னர், உங்கள் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்றும் கொஞ்சம் விசாரியுங்கள்.

அவன் நம் வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திக்  கொண்டிருக்கிறான், நாமோ 'நீயா, நானா' போட்டியில் கவனமாக இருக்கிறோம். எல்லாம் தமிழரின் தலைவிதி!

S P Udayakumaran

No comments: