Tuesday, June 19, 2018

தேச துரோகி -

தேச துரோகி

இது இப்போது சாதாரண வார்த்தை போல் ஆகிவிட்டது

ஆனால் இதுவே 10 ஆண்டுகளுக்கு முன்

தினமும் செய்தி தாள்களில் பார்க்கும் போது இவர்கள் உண்மை யாலும் தேச துரோகிகள் தான் நக்சல் வாதிகள் தான் என்று நினைத்த மக்கள் தான் நாம்

இன்று இவ்வளவு சமூக ஊடகள் இருந்தும் இதனுடை பாதகங்கள் பற்றி அரசுக்கு சொல்லியும் வீடு நிலம் என்று ஒன்று விடாமல் நம்மிடம் இருந்து பிடிங்கி முதலாளிகளுக்கு கொடுக்கும் போது நமக்கு எப்படி வலிக்கின்றது

இதை 10, 20 ஆண்டுகளுக்கு முன் அந்த மக்கள் யாரிடம் சொல்ல வேண்டும் என்பது கூட தெரியாமல் தன்னுணர்வுரை வெளிப்படுத்த செய்த தவறை மட்டும் சுட்டி காட்டி அவர்களை தன் இடத்தை தன்னுடைய அடையாளத்தை இழந்து நக்சல்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை பதித்தோம்

இது் மண்ணாசை இல்லை எங்களின் உரிமை என்பதை கூட உணர முடியவில்லை உங்களால்

வளர்ச்சி என்றும் வேகமாக சென்று வரலாம் என்று கூறும் நீங்கள் செங்கல்ப்பட்டு முதல் சென்னை வரை உள்ள இடங்களை 8வழி சாலை ஆக்குங்கள் அங்கே தான் பிரச்சனை உள்ளது பின் தெரியும் யார் துரோகிகள் தீவிரவாதிகள் என்று?


No comments: