Tuesday, June 19, 2018

நல்லவனா அரசியல் செய்வதா

எனக்கு தன்மானம் இருக்கு என்பதற்காக, நான் நல்லவன் தான் என்பதை நிரூபிக்க கூட்டணியில் இருந்து விலகினாலோ, அல்லது சிலர் சொல்வதைப் போல தனித்து நின்றாலோ என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முடியுமே ஒழிய எம்மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது;
அதிகாரம் மட்டுமே எம்மக்களின் துயரை துடைக்கும்; அந்த அதிகாரம் இன்று அரசியலில் மட்டுமே குவிந்து கிடக்கிறது; ஆகவேதான் இந்த கேவலமான, அருவறுப்பான அரசியலில் பல இழிவுகளை தாங்கி கொண்டு அரசியல் செய்கிறேன்!
எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்பதால் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து புத்தகம் புத்தகமாய் எழுதி தள்ளினால் யாருக்கு பயன்? என்னை நல்லவனாக காட்டமுடியும்; என் திறமைகளை வெளிச்சம் போட்டு, நான் பிரபலமடைவேன்;
ஆனால் எம்மக்களை அரசியல் படுத்த முடியாது; ஆகவே அரசியல் செய்கிறேன் !
- தொல்.திருமாவளவன்.

No comments: