Friday, June 22, 2018

பழைய தெரு நாய் புது வெறியுடன்

அம்பேத்கர் சவுதார் குளத்தில் தலித்கள் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக போராடிய போது அந்தக் குளத்தில் தலித் மக்கள் வளர்க்கும் கால்நடைகள் கூட சவுதார் குளத்தில் நீர் குடிக்கலாம் ஆனால் தலித்கள் நீர் எடுத்தால் குளம் தீட்டாகி விடும் என்பது தான் பார்ப்பன மத வாதமாக இருந்தது
காந்தி தனது ஆசிரமத்தில் ஒரு தலித் குடும்பத்தை சேர்த்த போது அங்குள்ள கிணற்றில் அந்த தலித் குடும்பம் நீர் எடுத்ததாலையே தண்ணீர் தீட்டாகி விட்டதாக பார்ப்பன மதம் தன் குரலை உயர்த்தியது
மகாராஷ்டிராவில் நேற்று பொது கிணற்றில் குளித்த காரணத்தினால் இரண்டு தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி தன்னை மிகக் கேவலமான சித்தாந்தம் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறது பார்ப்பன மதம்
ஒரு விசயத்தை இங்கே கவனிக்க வேண்டும் சவுதார் குளத்திலும் காந்தியின் ஆசிரமத்திலும் தலித்கள் தண்ணீரைத் தொடுவதால் தீட்டு என்று சொல்லும் பார்ப்பன மதம் மாற்று மதத்தினர்கள் அந்த தண்ணீரை தொடுவதை எப்போதும் எதிர்த்ததில்லை
நேற்றைய மகாராஷ்டிர குளத்திலும் வேற்று மதத்தினர் குளிப்பதற்கு எந்த தடையும் இருக்காது என்றே நினைக்கிறேன்
தனது எதிரி இஸ்லாம் தான் என்று பரப்பும் அதே வேளையில் இஸ்லாமியர்கள் பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பதை தீட்டு என்று எதிர்க்கவில்லை மாறாக தன் மதத்தின் ஒரு அங்கம் என்று செல்லக்கூடிய சமூக பிரிவினரை தீட்டு என்று தள்ளி வைக்கிறது
அதாவது பார்ப்பன மதத்தில் தன்னை உயர்ந்த ஜாதியாகவும் வேறு சமூக பிரிவை தாழ்ந்த ஜாதியாகவும் சிந்திக்கும் உளவியல் தான் இருக்குமேயன்றி வேற்று மதத்தவரை தாழ்ந்த மதமாக பார்க்கும் உளவியல் இருப்பதில்லை
நாய் வால் நிமிர்ந்தாலும் நிமிரலாம் காளை மாட்டில் பால் வந்தாலும் வரலாம் மோடி உண்மையை பேசினாலும் பேசலாம்
ஆனால் பார்ப்பன மதத்தில் சமத்துவம் சகோதரத்துவம் என்பது எல்லாம் நிர்மலா சீதாராமன் வாய் மீது சத்தியமாக வாய்ப்பே இல்லை
இந்து மதத்தை சீர்திருத்தம் செய்வது என்பது சாத்தியம் இல்லாதது அதில் இருந்து விலகி மதம் மாறுவதே இழிவில் இருந்து விடுபடும் வழி
- அம்பேத்கர்

No comments: