Tuesday, June 19, 2018

நிலமும் நிச்சியமும்

நிலமும் நிச்சியமும்
அன்று – 1985
மாலை 4 மணி சாமிநாதன் ஒரு பைல் கட்டை தூக்கிக்கொண்டு அலுவலகத்தில் இருந்து மொபட்டில் கிளம்பினார். பன்னையாரின் 14 வயது மகள் தேன்மொழி வாசல் தெளித்து கொண்டிருக்க
ஏம்மா தேன்மொழி பன்னைவாள் இருக்காரா
ம்ம்ம்… அப்பா உள்ள தான் இருக்காரு
சத்தே கூப்பிடுமா
அப்பா! அப்பா!
பன்னையார் வெளியே வந்தார்.
வாங்க சாமிநாதன் உள்ள வாங்க
இல்ல இருக்கட்டும்
என்ன செய்தி சொல்லுங்க
அது அந்த கீழத்தெரு சுப்பன் இருக்கான்ல
ஆமா
அவன் ஒரு மூணு குழி நிலம் பதிவு பண்ண வந்தான்.
அப்படியா
ஆமா நான்தான் இன்னிக்கு நாள் சரியில்ல ராதுகாலம் நாளைக்கு பண்ணிக்கலாம் அப்படினு சொல்லி அனுப்பின்டேன்
ஒஒஒ...இந்த பயல்வோலுக்கு தனியா நிலம் வாங்குற அளவுக்கு ஆய்போச்சா
ஆம இவன்கள இப்படியே விட கூடாது
ம்ம்ம். நாளைக்கு ஆகட்டும், நீங்க இந்த சுப்பன் பயல காலைல ஒரு பத்து மணிக்கு மணியன் டீ கடைக்கு வர சொல்லுங்க.
ம்ம்ம் சரி சொல்லிடுறன் .
ம்ம்ம்ம. சரி டீ குடிச்சிட்டு போங்க சாமிநாதன.
இல்ல இருக்கட்டும் பிள்ளையாண்ட ஸ்கூல்ல இருந்து கூப்பிடனும். நான் கிளம்புறன்.
சரி சாமிநாதன் கிளம்புங்க. அந்த சுப்பன் பயல மறக்காம காலைல டீ கடைக்கு வர சொல்லிடுங்க.
சாமிநாதன் மொபட்டை எடுத்தார். நேராக சுப்பன் வீடு இருக்கும் கீழத்தெருவின் முகப்பிலே மொபைட் நின்றது. தெரு முனையில் ஒரு பள்ளி செல்லும் வயதுடைய ஐந்து சிறுவர்கள் சட்டை இல்லா உடம்புடன் அழகாக பச்ச குதிர ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதில் ஒரு சிறுவனை நோக்கி டேய் என்றார் சாமிநாதன்.
சொல்லுங்க ஐயா என்று கையை முன் கட்டிக் கொண்டு கேட்டான் சிறுவன்.
இந்த சுப்பன் பயலே கொஞ்சம் கூப்பிட என்றார் சாமிநாதன.
சிறுவன் விறுவிறுவென்று ஒரே ஓட்டத்தில் சுப்பனின் குடிசைக்கு வந்தான்
சுப்பன் தன் மனைவி பொட்டுவின் வயிற்றில் காது வைத்து தன் அழகிய பிள்ளையின் மழலையை தொலைத் தொடர்பு கருவியே இல்லாமல் ரசித்தபடி இருந்தான்.
மாமா ஒரு ஐயா உன்னை கூப்பிடுது.. தெரு முனையில நிக்குது என்றான் சிறுவன்.
உடனே சுப்பன் ஒரே மூச்சாக துண்டை கையில் எடுத்துக்கொண்டு தெரு முக்கு ஓடினான்.
துண்டை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு, தன்நேரான வலிமையான முதுகில் கூனினை இடைச்செருகலாக செருகி சொல்லுங்க சாமி என்றான்.
பண்ணை நீ நிலம் வாங்குற விஷயமா உன்ன பாக்கணும்னு சொன்னார். காலை 10 மணிக்கு மணியன் டீக்கடைக்கு வந்துடு.
சரிங்க சாமி வந்துடுறேன் என்று சொல்லி பெரிய கும்பிடு போட்டான் சுப்பன்.
மீண்டும் மொபைட்டை எடுத்துக்கொண்டு தன் மகளை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு கொஞ்சி விளையாடிய படி சுவாமிநாதன் தன் வீட்டிற்கு சென்றார்.
இன்று - 2018
மாலை 4 மணி மகாலட்சுமி, ஆயிரம் நட்சத்திரங்களை தன்னுள் விழுங்கி செரித்தது போல பளபள உற்சாக முகத்துடன் தன் காதலன அருண் நோக்கி வந்தாள். மாநகராட்சி பூங்கா என்று கூட பாராமல் அருணின் கைகளை மெல்ல பிடித்து காதோரமாய் அணைத்து
நான் அப்பாகிட்ட பேசிட்டேன் அருண். அப்பா உன்னை மீட் பண்றேன்னு சொல்லிட்டாரு.
அப்படியா என்று சந்தோசத்தில் துள்ளிக்குதித்தான் அருண்.
அருண். நல்ல படிப்பு ஐடி கம்பெனியில் வேலை. இரு முறை ஆன் சைட்டுக்கு வெளிநாடு சென்று வந்துள்ளான். இன்றைக்கு அவருடைய சம்பளம் மட்டும் 1.5 லட்சம் இருக்கும். சொந்தமாக அப்பார்ட்மெண்டில் ஒரு வீடும் வாங்கி வைத்துள்ளார்.
மகாலட்சுமியின் அப்பா கணேசன் ஓய்வுபெற்ற தனியார் வங்கி கிளார்க். மிடில் கிளாஸ் ஃபேமிலி. அருணை விட வசதியில் சற்று குறைவு.
சரி அப்பா எங்க என்ன மீட் பண்ணனும்னு சொன்னாரு உன் வீட்டிலயா மகா
இல்லடா எங்க தெருமுக்குல இருக்க காபி ஷாப். நாளைக்கு காலைல 10 மணிக்கு.
சரி நான் வந்துடுறேன்
அன்று - 1985
காலை ஒன்பது 45 மணி. சுப்பன் மணியன் டீ கடைக்கு சென்றான். டீ கடையின் முன் ஆட்கள்் உட்கார இரண்டு மர பெஞ்சுகள் போடப்பட்டிருந்தது. அதில் இருவர் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். சுப்பன் மர பெஞ்சிகளுக்கு பின்னுள்ள மண்மேட்டில் கீழே உட்கார்ந்தான். அந்த இருவரும் டீ சொன்னார்கள். சுப்பனும் எனக்கு ஒரு டீ கொடுங்க சாமி என்றான். டீ போடுபவர் நன்கு சுட சுட மூன்று டீயை போட்டு அதில் 2 க்ளாசில் ஊற்றி அந்த இருவருக்கும் எடுத்துக்கொண்டு போய் கையில் கொடுத்தார். இன்னொரு டீயை அப்படியே கொண்டு வந்து சுப்பனிடம் நின்றார். அங்கு அருகில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கொட்டான் குச்சியில் ஒன்றை எடுத்து நீட்டினான் சுப்பன் கீழே உட்கார்ந்து கொண்டு. டீ போடுபவர் மேலே நின்றவாரே அந்த டீயை அவன் கொட்டாங்குச்சியில் ஊற்றினார். டீயை குடித்துவிட்டு அந்த இருவரும் காசு கொடுத்தனர். சுப்பனும் காசு கொடுத்தான்.
புல்லட் சவுண்ட் புடு சுடு என்று கேட்க திரும்பி பார்த்தான சுப்பன். அங்கே பண்ணையார் தன்னுடைய பெரிய மீசையை முறுக்கியவாறு புல்லட்லிருந்து இறங்கி டீ கடை நோக்கி வந்தார்.
பண்ணையாரை பார்த்தவுடன் சுப்பன் துண்டைத் தன் கக்கத்தில் வைத்து கூனினான்.
என்னடா சுப்பா உனக்கு நிலம் வாங்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா
இல்லை ஐயா என் பெண்சாதி நிறை மாசத்தில இருக்கு அதுக்கு ஒரு ஆசை ரெண்டு குழி நிலம் வாங்கி சொந்தமாக ஒரு கான்கிரீட் வீடு போட்டு வாழனும்னு அதுக்குதான் ஐயா.
உன் பொஞ்சாதி ஆசைப்பட்டா நீ எல்லாம நிலம் வாங்கிடலாமா.அதுக்கெல்லாம் ஒரு இது வேணாம்.
ஐயா
சரி உனக்கு ஏது இவ்வளவு பணம்.
ஐயா என் பொஞ்சாதி சொந்தமா கொஞ்சம் சவரன் வச்சிருந்தா அப்புறம் கூலி வேலை பாத்து நானும் அவளும் சொந்தமா கொஞ்சம் காசு சேத்து வச்சி இருக்கோம்
என்னது நீ எல்லாம் காசு சேத்து வச்சிருக்கியா. சரி போன அறுப்புக்கு அப்புறம் என்கிட்ட இருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கடன் வாங்குனல
ஆமா ஐயா அதுக்குத்தான் நான் வட்டி தவனை கரெக்டா கட்டிகிட்டு இருக்கனேய்யா
என்னையே எதித்து பேசுறியா. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் எனக்கு இப்போ முழு காசு தேவைப்படுது நீ கொண்டு வா.
ஐயா ஐயா மன்னிச்சிடுங்க ஐயா
அதல்லாம் முடியாது போ போய் வீட்ல இருக்க காசு கொண்டு வா.
வீட்டை நோக்கி தன் கவலை கலந்த முகத்துடன் வருத்தத்துடன் சென்றான்
சுப்பன்…...
இன்று(2018)
காலை ஒன்பது 45 மணி காபி ஷாப் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் அருண்.
அங்கே அவனுக்காக ஏற்கனவே மகாலட்சுமியும் அப்பா கணேசனும் காத்திருந்தனர்.
சமமாக போடப்பட்ட உயர்தர கண்ணாடி டேபிளின் ஒரு முனையில் அப்பா கணேசனும் நடுவில் மகாலட்சுமியும் உட்கார்ந்திருக்க எதிரே உள்ள நாற்காலி அருணுக்காக காத்து இருந்தது.
அருண் உள்ளே வந்து ஹாய் அங்கிள் என்று சொல்லி எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தான்
சொல்லுப்பா என் பொண்ணு எல்லாத்தையும் சொன்னா
ஆமா அங்கிள் நாங்க 3 இயர்ஸா லவ் பண்றோம். நான் அவள நல்லா பாத்துப்பேன் சொந்தமா வீடு வச்சிருக்கேன். என்னோட சேலரி இப்போ 1.5 லட்சம் அங்கிள் கொஞ்ச நாள்ல இன்னும் அதிகமாகும் அங்கிள். அப்புறம் எனக்கு சிகரெட் தண்ணி என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது அங்கிள். என்று தன்னை பற்றி சொல்லி முடித்தான் அருண்
ம்ம்ம்ம் எல்லாம் சொன்னாபா என் பொண்ணு எனக்கு சம்ம்ம்ம் என்று சொல்ல வரும் போது கனேசனின் போன் அடித்தது
போனில் சிவராமன,கணேசனின் நண்பன் தன் காதல் விவகாரத்தை சொன்ன உடன் சிவராமன் அருண் ஊர் என்பதால் அவரிடம் அவனைப் பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தார கனேசன்.
போனை எடுத்து செல்லு சிவராமன் என்றார.
இப்பொழுது இரண்டு உயர்தர கோப்பையில் மூவருக்கும காபி டேபிளில் வந்து வைக்கப்பட்டது.
சிவராமன் ஒரு இரண்டு நிமிடம் கணேசனுடன் பேசினார். ஆனால் கணேசன் எதுவும் பதில் பேசவில்லை .சரி சரி என்று ம்ம்ம் கொட்டியவாரே போனை கட் செய்தார்.
ஏதோ ஒன்று நினைத்தபடி அமைதியாக இருந்தார் கணேசன்.
இப்பொழுது மகாலட்சுமி அப்பா எனறார்்
டக் என்று நினைவுக்கு வந்த கணேசன் சொல்லுமா என்றார்
அருண் பா
சொல்லு தம்பி
உங்களுக்கு சம்மதம் தானே அங்கிள்
இல்லை அது வந்துபா என் பெண்ண இன்னும் கொஞ்சம் படிக்க வைக்கலாம் நினைக்கிறேன்
கல்யாணதுக்கு அப்புறம் நானே படிக்க வைக்கிறன் அங்கிள்.
அது இல்லப்பா எங்க குடும்பத்திற்கு இந்த காதல் அது இது எல்லாம் சரியா வராது. உன்னை நேர்ல பாத்து சொல்ல தான் உன்னை இங்க கூப்பிட்டேன்.நீ அவளை மறந்துடு பா நீ உன் வாழ்க்கையை பாரு என்றார் கணேசன.்
இடி இறங்கியது போலிருந்தது மகாலட்சுமிக்கும் அருணுக்கும்
உடனே அங்கிருந்து எழுந்து சரி நான் கிளம்புறேன் அங்கிள் என்று காபியை அப்படியே வைத்துவிட்டு கிளம்பினான்.
யோசனையில் காபி ஷாப் கதவைத்திறந்து வெளியே செல்லும்போது அருணின் போன் ரிங் அடித்த்து.
போனை பார்த்தான். அப்பா கால் செய்து கொண்டிருந்தார்.
கவலையில் கை நடுக்கத்துடன் போனை அட்டன் செய்து
சொல்லுப்பா என்றான் அருண்
என்ன ஆச்சி தம்பி பொண்ணு வீட்ல பேச போறதா சொன்னல. பேசிட்டியா தம்பி. சம்மதம் சொல்லிட்டாங்களா.
ம்ம்ம் இல்லப்பா அவங்க அப்பாக்கு என்ன முதல்ல பிடிச்சி இருககுனு சொன்னாரு. ஆனா திடீர்ன்னு ஏது எதோ சொல்லு சம்மதம் இல்ல சொல்லிட்டாங்கப்பா என்றான் தன் தள தளத்த குரலில்.
நீ கவல படாத தம்பி எல்லா நல்லதா நடக்கும் என்று சொல்லி போனை கட் செய்து விட்டு
ஏதோ ஒன்றை யோசித்தபடி தன் கவலை கலந்த முகத்துடன் வருத்தத்துடன் நின்றான்
சுப்பன்…

No comments: