Tuesday, June 19, 2018

சிவகுமார் - சாதிவெறியன் - பழைமைவாதம் பேசி திரியும் மூடர்

சிவகுமார்..
சாதிவெறியன் எனச் சொல்லி கடந்துவிடலாம் ஆனால் முன்பு பேசியதை மீண்டும்,கதைப்பதிலிருந்தே இந்த சமூகத்தில் வாழும் சில விசகிருமிகளில் தானும் ஒருவராக சொல்கிறார்..
..
ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்தால் தவறு நடக்குமென சொல்வதிலிருந்து அது பழைய சங்கராச்சாரியர் வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரி என்றாரே அதையை இவர் மீண்டும் மொழிகிறார்.. சினிமா பின்னணியில் வாழ்ந்தவரிடம் தான் சார்ந்த துறையில் பெண்களை இவர் எந்தளவிற்கு மதித்திருப்பாரென நமக்கு புரிகிறது.. யோக்கியனாக தன்னை காட்டிக்கொள்ளும் இவரின் சாதிய பின்புலம் அதனோடு கொண்ட வெறி ஏற்கனவே நமக்கு தெரிந்ததென்றாலும்.. ஒரு பொதுவெளில் குறிப்பிட்ட அதிலும் IT துறை சார்ந்த பெண்களை கண்ணிய குறைவாக தரம்தாழ்த்தி பேசுவதென்பது இவரின் மனதின் கசடை நமக்கு உணர்த்துகிறது..
நாமும் அவரைப் போல இறங்கி கதைக்க தேவையில்லை.. அவரின் பிறவி கோளாறென கருதுவோம்.. 
..
சினிமாவில் நாயகன் வேசம் கட்டினால் நாலும் தெரிந்தவன் போல் பேச இங்குதான் முடிகிறது .. தெளிவற்ற வறட்டு சிந்தனையை கொண்டுவந்து இங்கே கொட்டுகிறார்கள்.. தங்களை யோக்கியர்கள் போலவும் .. மிக சிறந்த பண்பாளர்கள் போலவும் காட்டிக்கொள்ள நினைக்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தொடர்ந்து வருகிறது.. அரசியல் ஆன்மீகம் என பழைய நடிகர்கள் பொழுது போகாமல் எதையாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார்கள்.. மிக மோசமான விமர்சனபார்வையை சிவகுமார் வைத்துள்ளார்.. என்ன ஆச்சர்யம் .. IT துறையில் அதிகளவில் மேட்டுக்குடியினரே இருந்தும் யாரும் அவருக்கெதிராக கருத்தை கண்டத்தனத்தை சிறு எதிர்ப்பை கூட பதியவில்லை..
..
பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களின் திறமையை பறைசாற்றும் காலகட்டத்தில் பழைமைவாதம் பேசி திரியும் இப்படிபட்ட மூடர்களை புறந்தள்ளவேண்டும் .. பெண்கள் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது .. பிற்போக்குவாதிகளில் வெற்று கூச்சலை கடந்து வெற்றி பெறுவோம் .. பெண்களை இழிவு செய்யும் மடையர்களை விரட்டியடிப்போம்.. சிவகுமார் போன்ற பிற்போக்குவாதிகளின் குடும்ப பெண்களுக்கு ஆறுதலை சொல்வோம்.. 
..
பெண்களை இழிவாக பேசும் சிவகுமார் நாவடக்குவது நல்லது.. 

No comments: