Friday, June 22, 2018

பார்ப்பன தந்திரம் - 1

பார்ப்பன தந்திரம்.....
ஒரு மாத சுய ஆலோசனைக்கு பிறகு இப்பதிவை எழுதுகிறேன்.
பிராமணன் தமிழர்களை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறார்கள் என்பதை உணர்த்தவே இப்பதிவு.
நாம் நிறைய கேள்விபட்டிருப்போம் நம் பாட்டி, கொள்ளுபாட்டி,பூட்டி எல்லாம் ஏழு வயதிலும் எட்டு வயதிலும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று.அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொண்டிருந்தேன் அந்த காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி இல்லாததால் மக்களுக்கு போதிய அறிவின்மையின் காரணமாக நிகழ்ந்திருக்கும் என்று.
பிறகுதான் என் மூளைக்குள் ஒரு மணி அடித்தது.
விஞ்ஞானமா?அப்படி என்றால் என்ன என்று தெரியாத காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்த இனம் எப்படி அறிவில் குன்றியதாக இருக்கும்.அப்படி என்றால்,அந்த காலத்தில் நடந்த குழந்தை திருமணத்திற்க்கு என்னதான் காரணம் என்று ஆராய்ந்தால் கிடைத்தது பதில்.
எல்லாம் சரி,இதற்க்கும் பிராமணனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க்கிறீரா.இருக்கிறதே...
மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்.
இது என்னவென்று புரியவில்லையா....இது தான் பதில்...ஆம் இக்காலத்து அப்பாக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை,ஆனால் அக்காலத்து அப்பாக்களுக்கு இது நன்றாக தெரியும்.
நான் இந்து நான் இந்து என்று மார்தட்டிக்கொண்டு திரியும் ஒரு சில இக்காலத்து அப்பாக்களும் இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இப்பதிவு.
இந்து தர்ம நீதி நெறிகளை வகுத்த மநுவின் தர்மம்...எட்டு வயதிற்க்குள் உன் மகளை கன்னிகாதானம் செய்து விட வேண்டும்,இல்லையென்றால் அதற்க்கு கிடைக்கும் தண்டனை மரணத்தை விட கொடியது.
மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்.
அட கையாளாகாத அப்பா,உன் பெண்னை நீ எட்டு வயதிற்குள்ளேயே இன்னொருத்தனுக்கு பிடித்து கொடுக்க வேண்டும்,ஆனால் நீ அதை செய்ய தவறிவிட்டாய்,அவள் இப்போது ருதுவாகிவிட்டாள்,ருதுவான பின் மூன்று வருடத்திற்க்குள் அவளுக்கு மனமுடிக்கவில்லை என்றால் அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.ஆனாலும் ருதுவாகும் வரை அவளை நீ உன் வீட்டில் வைத்திருப்பது எப்படி சரியாகும்.
அதனால் இதோ தண்டனை,ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை உன் பெண்னுடைய பஹிஷ்டை காலத்தில்(அதாவது மாதவிலக்கு காலத்தில்) வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.இப்படி ஒரு தண்டனையை பெருகிறோமே என நீ வருத்தப்பட வேண்டும்.அதற்க்காககதான் இந்த தண்டனை.
இப்படி ஒரு கருத்தை சுமந்து நிற்ப்பதை நினைத்து அந்த சமஸ்கிருதம மொழியே நாணி தீயில் கருகிவிடலாம்.இந்த எலவு மொழியைதான் இன்று இந்தியா முழுவதிற்க்கும் விநியோகம் செய்ய பலர் முயற்சிக்கின்றனர்.
சரி இதற்க்கு பரிகாரமே கிடையாதா என்றால்..மகா தர்மத்தலைவன் மநு அவர்கள் ஒரு பரிகாரத்தை சொல்கிறார்.
இதிலிருந்து நீ தப்பிக்க அவளின் ஒவ்வொரு பஹிஷ்டையின் போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பன்னிவிடு.இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.அதாவது மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும்வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகிறதோ அத்தனை பசுக்களை தானம் செய்ய வேண்டும்....
இந்த கொடுமையை கணவில் கூட நினைத்து பார்க்க முடியாது.
இருந்த இடத்திடல் இருந்தே எம் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்த கூட்டம்.
ஆதாரம் வேண்டும் என கேட்ப்பவர்கள்.தாத்தாச்சாரியாரின் இந்து மதம் எங்கே போகிறது என்ற கட்டுரையில் தேடி கண்டுபிடித்து கொள்ளுங்கள்.

No comments: