Monday, September 04, 2017

அவுங்கதான் நமக்கு கல்வி கொடுப்பாங்க

உன்னோட பிளஸ் டூ கட் ஆஃப் என்ன”
”278”
”எந்த காலேஜ்ல படிச்ச”
“ஆர்.ஈ.சி திருச்சில”
“278 க்கு எப்படி ஆர்.ஈ.சி திருச்சி கிடைச்சது”
“எனக்கு பிசி கோட்டா உண்டு அதுல கிடைச்சது”
“சூப்பர். பிசி கோட்டான்னா என்ன அது ஏன் வந்துச்சுன்னு தெரியுமா?”
“தெரியாது”
“அந்த வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு பின்னாடி அம்பேத்கர் மாதிரி ஆட்களோட உழைப்பும் தியாகமும் இருக்கு தெரியுமா”
“யாரு அம்பேத்கர்?”
”அம்பேத்கர் தெரியாதா உனக்கு”
“தெரியாது. நான் படிச்சேன். நான் ஆர்.ஈ.சி போனேன். நா நல்லா சம்பாதிக்கிறேன். இதுல ஏன் அம்பேத்கர் பத்தி தெரிஞ்சிக்கனும் சொல்லு. எதுன்னாலும் சட்டுன்னு சொல்லு. நாளைக்கு சரஸ்வதி பூஜை. நான் பூஜைக்கு சாமான் செட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போகனும்”
“சரஸ்வதி பூஜை எதுக்கு கொண்டாடுற?”
“என்ன நீ.. அம்பேத்கர் அது இதுன்னுட்டு தேவையில்லாத எல்லாம் பேசுற. ஆனா சரஸ்வதின்னா யாருன்னு தெரியாதுங்கற. சரஸ்வதிதான் நம்ம கல்விக்கு கடவுள். அவுங்கதான் நமக்கு கல்வி கொடுப்பாங்க”
“இப்பதான் நீ படிச்சே நீ அர்.ஈ.சி போனேன்னு சொன்ன”
“அது நான் படிச்சாலும் சரஸ்வதி கடாட்சம் இல்லாம ஆர்.ஈ.சிக்குள்ள போயிருக்க முடியுமா”
“ஸோ நீ ஆர்.ஈ.சிக்குள்ள போனதுக்கு காரணம், அம்பேத்கர் இல்ல சரஸ்வதின்னு முழுமையா நம்புற”
“ஆமா சரஸ்வதி தேவிதான் கல்விக்கு அதிபதி”
“அப்ப அந்த சரஸ்வதி தேவி ஏன் உன் தாத்தாவுக்கு கல்வி கொடுக்கல, பத்மநாபன், பார்த்தசாரதி தாத்தாவுக்கு மட்டும் கல்வி கொடுத்தாங்க. அப்படி நினைச்சிப் பாத்தியா. அப்ப எப்பத்துல இருந்து உனக்கு கல்வி கிடைக்க ஆரம்பிச்சது, அதுக்கான வாய்ப்ப யாரெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தா யோசிச்சியா”
“இதப்பாரு எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் சரஸ்வதி பூஜைக்கு சாமான் வாங்கனும். போய் புத்தகங்களுக்கெல்லாம் மஞ்சள் கரைச்சி பிள்ளையார் சுழி போடனும். நிறைய வேலை இருக்கு. நா போறேன்”
“சரி போடா இந்திய குடிமகனே போ. ’கலைவாணி நின்கருணை தேன்மழையே பாடிகிட்டே போ’” நல்லா இரு...சமூக அறிவு உனக்கு நிறைய இருக்கு... நீ கலக்கு..

Friday, September 01, 2017

மெண்டல்கள் பலவிதம்

இன்றைக்கு OMR வழியாக வருகிற போது "SAVE RIVER" ன்னு ஒரு கும்பல் கொட்டுகிற மழையில் பதாகைகளை பிடித்துக் கொண்டு நின்றது.
நான் அருகில் போய் BROTHER , இந்த BLUE WHALE விளையாட்டென்று பயமுறுத்திக் கொண்டிருக்காங்களே அது மாதிரியானதா இப்ப நீங்க பதாகை பிடித் து நிற்பது என்று நான் கேட்க, அவரு கொஞ்சம் குழம்பி பின்பு சுதாரித்து கொண்டவராக, BROTHER கிண்டலடிக்க வேண்டாம். நாங்க நநதியை காப்பற்றுவதற்காக மழையில் நிற்கிறோம் என்றார். நான் அவரிடம் நானும் அதைத் தான் சொல்கிறேன் . நதியை காப்பாற்றனும் என்றால் வெயில் காலத்தில் மக்களிடம் போய் எடுத்துச் சொல்லலாமே. நதிகளில் தண்ணீர் கரை புரண்டோடுகிற மழைக்காலத்தில் நனைந்து கொண்டே சொன்னால் எப்படி brother என்றேன். அப்படியே "கோவையில் காட்டை அழித்து ஆசிரமம் அமைத்திருக்கிற சக்கி வாசுதேவின் செயலை பற்றி என்ன நினைக்கிறீங்க" என்று கேட்டவுடன், Brother உங்களது ஆதரவை கொடுக்க முடித்தால் கொடுங்க விதண்டாவாதம் பண்ணாதீங்க என்றார். நான் அவரிடம் Brother காடுகளிலிருந்து தானே ஆறுகள் பிறக்கிறது நீங்கள் காட்டை அழித்து ஆசிரமங்கள் அமைப்பவர்களை பற்றி பேசாமல் விட்டு விட்டு ஆறுகளை காப்பற்றப் போகிறோம் என்பது எப்படி சரியாகும் என்றதும் அமைதியாகி விட்டார்.
நானும் இந்த மெண்டல்களோடு சேர்ந்து நாமும் ஏன் மழையில் நனையனும் என்றெண்ணி நகர்ந்து வந்து விட்டேன் .

 இதை சொன்னா நம்மை பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள்

சென்னை ஆக்கிரமிப்பு செய்திருப்பது இப்பொழுது கோவை - திருப்பூர் - ஈரோடு மற்றும் மதுரை - திருநெல்வேலி - தூத்துக்குடி பகுதி சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு ஒரே ஒற்றுமை ஜாதி, மதம், முதலாளித்துவ வெறியர்கள்

இது பாஜகவின் பிராக்சிகள் அதாவது நவீன பெயரில் சுற்றுச்சூழல் ஆா்வலா் என்ற பெயரில்லிருப்பவா்கள் ஆனால் இவா்களுக்கும் இயற்கைக்கும் எந்தச்சம்பந்தமமுமில்லை