Tuesday, March 27, 2018

NRI தமிழர்களையும், புலம்பெயர்தமிழர்களையும் generalize செய்யலாமா

NRI தமிழர்களையும், புலம்பெயர்தமிழர்களையும் generalize செய்யலாமா எனக் கேட்கிறார்கள். நான் generalize செய்யவில்லை. ஆனாலும் விமர்சிக்கவே கூடாதென்று இலங்கையிலும், வேறு நாடுகளிலும் வசிக்கும் பெரியாரிஸ்டுகளில் சிலர் என்மேல் கோபப்படுகிறார்கள். நிற்க. இவர்களைப் பொறுத்தவரை என் பார்வை ஒன்றே ஒன்றுதான். பண்டைய ரோமில் அடிமைகளை சாகும்வரை புலிகளோடு மோதவிடும் கிளாடியேட்டர் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை பரணில் அமர்ந்து பார்த்து குதூகலித்த மக்களைப் போல இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டு அரசியலைப் பார்க்கிறார்கள். காலம்காலமாக அதுதான் நடக்கிறது என்றாலும், 2009க்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியல்/அறிவு/சமூகச்சூழலை நிர்மூலமாக்க இவர்கள் வாரி இறைத்திருக்கும் தொகை கொஞ்சநஞ்சமல்ல. இன்றும் தாலியில் மேக்னட் உள்ளது, மிஞ்சியில் அணு ஆயுதம் உள்ளது, சீமான் முதல்வர் ஆகிவிடுவார் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பல, "நம்மில் எத்னி பேருக்கு தெரியும்," வகை முகநூல் பக்கங்கள் இவர்களால் ஸ்பான்சர் செய்யப்படுகின்றன. இயக்குனர் சமுத்திரக்கனி பெயரில் முட்டாள்த்தனமான கருத்துக்களைப் பரப்பும் பல லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட ஒரு போலி பக்கத்துக்கு எங்கேயிருந்து ஃபண்ட் வருகிறது எனப் பார்த்தால் இலங்கையில் இருந்து வருகிறது!! இதுபோல் பல நூறு பக்கங்கள் உண்டு. ஒரு தலைமுறையையே அறிவுக்குருடர்கள் ஆக்கும் வகையில் வாட்சப்களில், முகநூல் பக்கங்களில் காணொளிகளைப் பரப்புவதில் முதல் ஆளாக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று தமிழ்நாட்டில் ஆங்காங்கே மேடை போட்டுக்கொண்டு 1800களைப் போல கிறுக்குத்தனமாக பேசிக்கொண்டிருக்கும் ஆட்கள் அத்தனை பேரும் சிலோன் தமிழர்களாலும், ஈழத்துக்காக போராடுகிறேன் என்கிற பெயரில் வெளிநாடுகளில் அமர்ந்துகொண்டு இங்கிருக்கும் fraudகளுக்கு fund செய்யும் உணர்வாளர்களாலும் வளர்த்துவிடப்பட்டவர்கள்.
நடைமுறையை புரிந்துகொண்டு, தமிழக அரசியலைப் புரிந்துகொண்டு இணக்கம் காட்டும் புலம்பெயர்த்தமிழர்கள் பலர் உண்டு. ஆனால் 3% மட்டுமே இருக்கும் பார்ப்பனர்களில் 3% பேர் மட்டுமே எப்படி திராவிட இயக்கத்தின் நியாயத்தை புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்களோ, அதேபோல சொற்பத்திலும் சொற்பமாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள். எப்படி இங்கிருக்கும் பாரிசாலன் வகையறா இளைஞர்களிடம் பேசும்போது அயர்ச்சியும், அதிர்ச்சியும் ஏற்படுமோ, அதுபோலவேதான் பல வளர்ந்த நாடுகளில் வசிக்கும் சிலோன் தமிழர்களிடம் பேசும்போதும் இருக்கிறது. கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்நுழைவது குறித்த ஏதோ ஒரு விவாதத்தில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிலோன் தமிழர் ஒருவர் கேட்கிறார், "நீ கு** கழுவாம உள்ள போனீனா அவன் எப்படி விடுவான்?" என்று!! தமிழ்நாட்டில் பார்ப்பனர்களோ, தீட்சிதர்களோ கூட இப்படியெல்லாம் மடத்தனமாக காரணம் சொல்லமாட்டார்கள். அந்த இழை மட்டுமல்ல இதுபோல் அவர்களுக்குள் நடக்கும் ஏனைய விவாதங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்படியாகப்பட்ட சமூக அறிவுடன் சுற்றும் இவர்கள்தான் தமிழ்நாட்டை யார் ஆண்டால் நன்றாக இருக்கும் என்றும், திராவிடம் என்பது தமிழ் விரோதம் என்றும், தமிழ்நாட்டில் மாற்று அரசியல் வேண்டும் என்றும் இன்னொருபக்கம் விவாதம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் 3% பேருக்கு பெரியார் பிரச்சினையாக இருக்கிறார் என்றால், அங்கே 97% பேருக்கு பிரச்சினையாக இருக்கிறார் என்பதுதான் உண்மை.
இப்படியான விவாதங்களைக் கண்டு குமுறும் முற்போக்கு ஈழத்தமிழர்கள் கூட அவர்களுடன் பொதுவெளியில் மோத ஏனோ தயாராக இல்லை! ஆனால் என் போன்றவர்களுடன் மோதவோ, என் போன்றவர்களை விமர்சிக்கவோ ஆளுக்கு முன்னால் நிற்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சிலோன் தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தமிழர்களை எவ்வளவு தாழ்வாக பார்க்கும் மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடன் பழகுகின்றவர்களுக்குத் தெரியும்.
நான் மேலே சொன்னதைப் போல யாரையும் பொதுமைப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் 3% மக்களின் மீதான என் வேதனையை தெரிவித்ததைப் போலவே, வெளிநாடுகளில் வாழும் 97% மக்களின் மீதான என் வேதனையை தெரிவித்தேன். அதுவே வலிக்கிறது என்றால், மருந்திட்டுக்கொண்டு மாற வேண்டியது நீங்கள்தான். நானில்லை.

No comments: