Thursday, July 25, 2019

10% பிராடு ஒதுக்கீடு!

அந்தக் காலத்திலே தில்லிக்கும் மும்பைக்கும் போன நம்மாள் பிழைப்பதற்காக ரயிலேறிய கூலித் தொழிலாளிகள் (ஆதாரம்: காலா, நாயகன் திரைப்படம் ;) )
ஆனால், அவாளோ மத்திய அரசுப் பணியாளர்களாகச் சென்றார்கள். மும்பையின் மாதுங்கா பகுதி, செகந்திராபாத் போல ஒவ்வொரு பிற மாநிலப் பெரு நகரத்திலும் அவாக்கள் கூடி வாழும் பகுதிகளைக் காணலாம். (ஆதாரம்: ரோஜா, மௌன ராகம் திரைப்படம் ;) )
இன்றும் சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள ரயில்வே, LIC, அஞ்சல் துறை பெரு அலுவலகங்களுக்குச் சென்றால் அவாக்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்.
இத்தனை நாள் பொதுப்போட்டி என்ற பெயரில் SC/ST இடங்கள் தவிர மற்ற 77.5% இடங்களை எல்லாம் அவர்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏன் என்றால் இந்த வேலைக்கு எல்லாம் எங்கு விண்ணப்பம் வாங்குவது என்பதே நமக்கு 20 ஆண்டுகளாகத் தான் தெரியும்.
இப்போது தான் ஊருக்கு ஊர் ஒரு IAS academy, Officers training academy வந்து நம்ம ஆட்கள் இந்தப் பணிகளுக்கு முட்டி மோதிப் போட்டியிடுகிறார்கள்.
இது பொறுக்காமல் தங்கள் ராஜாங்கம் கை நழுவிப் போகக் கூடாது என்று கொண்டு வரப்பட்டது தான்
இந்த 10% பிராடு ஒதுக்கீடு!

No comments: