Friday, August 04, 2017

பண மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு வழங்கியுள்ள அறிக்கையில்..

பண மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு வழங்கியுள்ள அறிக்கையில்..
∆ பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஒரு பெரும்பிழை.. அதன் குறி இலக்கு ஏதும் எட்டப்படவில்லை..
∆ பெருமதிப்பிலான கறுப்புப் பணம் ஏதும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.. 4172 கோடி மட்டுமே சந்தேகத்திற்கிடமான பணமாக உள்ளது.
∆ ரொக்கமில்லா அல்லது குறை ரொக்க பொருளாதாரம் சாத்தியமாகவில்லை..
∆ பயங்கரவாத நிதியளிப்பு வலைப்பின்னலில் எந்த தாக்கத்தையும் இந்நடவடிக்கை ஏற்படுத்தவில்லை..
∆ பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களையும் அமைப்புசாரா தொழிலையும் பெருமளவு நலிவடைய செய்தது. 3 லட்சம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, 4 கோடி பேர் வேலையிழந்ததாக பாரதிய மஜ்தூர் சங்கம் தெரிவிக்கிறது..
∆ திட்டத்தின் அனைத்து முடிவுகளும் எவ்வித முன் யோசனையும் இன்றி எடுக்கப்பட் டுள்ளது. இன்றுவரை கிராமப் பகுதிகளில் ATM கள் வேலை செய்யவில்லை
∆ பண மதிப்பிழப்புத் திட்டத்தின் தோல்வி சுகாதாரம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளின் செலவீனங்களில் கைவைக்க வழி வகுத்துள்ளது..
∆ வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.. முதலீட்டிற் கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது..
∆ இந்த அமைப்பு ரீதியான குளறுபடிகளுக்கு யார் பொறுப்பேற்பது.. இத்திட்டத்தால் ஏற்பட்ட ₹30000 கோடி செலவுக்கு யார் பதில் அளிக்கச் சொல்வது? 180க்கும் மேற்பட்ட சாவுக்கு யாரை குற்றஞ்சாட்டுவது?
சரியாகத்தான் சொன்னார் உங்களின் மௌன் மோகன் சிங் /அமைப்புசார் கொள்ளை/ என்று.. வாய் கிழிய பேசுபவர்கள் தான் இப்ப பொத்திக்கிட்டு இருக்காய்ங்க..
இப்பவும் அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம்.. ஓட்டை பத்திக் கவலைப்படாமல் இது மாதிரி ஓட்டை நடவடிக்கையை எடுக்க 56" மார்தான் வேண்டும்.. அதை கண்டு உங்களுக்கு ஏன் காண்டாவுது.. நாடு வல்லரசாக வேண்டாமா?
/எத்தனை பேரு வரி கட்டாத ஏமாத்துறாய்ங்க.. அடிச்சாரு பாரு ரிவீட்டு?/
/என்னால நம்பவே முடியல.. இப்டி ஒரு அதிரடியா?/
/தீவிரவாத கும்பல் எல்லாம் நாசமாப் போச்சி.. சிங்கிள் டீக்கு வழியில்ல/
/புதிய இந்தியா பொறந்த வுடனே டாக்டராயிடிச்சி/
/இனி ஒருபய அரசாங்கத்த ஏமாத்த முடியாது/
என்றெல்லாம் தாண்டிக் குதித்தவர்கள், அந்தரத்தில் பல்டியடித்தவர்கள், இதென்ன பித்துக்குளித்தனம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை மடையர்களாக/ நாட்டு நலனில் அக்கறையற்றவர்களாக சித்தரித்து படங்காட்டியவர்கள் அனைவரும் -
அவுரு மூஞ்சி தொடைச்சிட்டிருந்த கொடியை வாங்கி தலையில முக்காடு போட்டுக்கிட்டு கெளம்புங்க.. கெளம்புங்க..

No comments: