Wednesday, May 02, 2018

இந்துக்கள் வீடு vs வெள்ளைக்காரன் வீடு

இந்துக்கள் வீட்டில் பஞ்சாங்கம் இருக்கும். வெள்ளைக்காரன் வீட்டில் அட்லஸ் இருக்கும். வெள்ளைக்காரன் வீட்டில் சின்ன நூல்நிலையம் இருக்கும். இந்துக்கள் வீட்டில் . பூசையறை இருக்கும். படிப்பதற்கு தனீயறை வைத்திருப்பது வெள்ளைக்காரனுடைய பண்பாடு. ஆன காரணத்தினால்தான் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட யந்திரங்கள், கருவிகளில் 99 விழுக்காடு மேற்குல நாட்டுக்காரன்தான் கண்டுபிடித்தவைதான்.தமிழன் கண்டு பிடித்த ஒரு கண்டுபிடிப்பைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அது அவனது குருதியில் இல்லை. மழை வேண்டுமா? உடனே யாகம் செய்கிறான். பிள்ளை இல்லையா? அதற்கும் யாகம் செய்கிறான். திருமணமாகவில்லையா? அதற்கும் யாகம் இருக்கிறது! ஆனால் மழை பெய்கிறதா என்றால் இல்லை. பிள்ளை பிறக்கிறதா என்றால் அதுவும் இல்லை.ஆனால் இன்னறைய மருத்துவர்கள் மலட்டுத் தன்மைக்கான காரணங்களைக் கண்டுபிடித்து நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு அதனை நீக்குகிறார்கள்.

No comments: