Friday, August 16, 2019

ஒரு ஊரில் ஒரு பிராடு சாமியார் இருந்தார்.

ஒரு ஊரில் ஒரு பிராடு சாமியார் இருந்தார்.

(சாமியார் என்றாலே பிராடு தானே என்று இதில் என்ன தனியா பிராடு சாமியார் என்று கேட்பவர்கள் கருப்பப் படுவார்கள்)

அவரிடம் ஒரு தமிழன்  வந்து
அய்யா! வாழ்க்கையிலே பணம் இருக்கு, வசதி சொத்து சுகம் எல்லாம் இருக்கு. ஆனால் இப்போ கொஞ்ச நாளா எதுவுமே இல்லைன்னு தோணுது. என்றானாம். .

அதற்கு அந்த சாமியார் மெல்ல சிரித்துக்கொண்டே கேட்டார்
எப்போதில் இருந்து இப்படி எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது ? என்று கேட்டார்.

அதற்கு அந்த தமிழன் சொன்னான்
சரியா நினைவில்லீங்க!, ஆனா, திராவிடத்தால் வீழ்ந்தோம்ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க பாருங்க , அப்போதில் இருந்து தான் இப்படி தோணுச்சு என்று சொன்னார்.

சாமியார் மர்மப் புன்னகையோடு தலையசைத்தார்.

சரி! உன்னிடம் இருப்பதை எல்லாம் ஒரு மூட்டை கட்டி கொண்டு வா என்று  சொன்னார்.

அதற்கு தமிழனும் தன்னிடம் இருக்கிற பணம் நகை இவற்றை எல்லாம் மூட்டை கட்டி அந்த சாமியார் முன்னிலையில் வைத்தான்.

தீடீர்ன்னு அந்த சாமியார் அந்த பணம் நகை எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்


பதறிப் போன தமிழன் பின்னால் துரத்திக்கொண்டே போனான்.

சாமியாரை விரட்டி விரட்டி துரத்தியதில் , சாமியார் போகிற போக்கில் அந்த மூட்டை அவிழ்ந்து சில பண கட்டுகளும் , நகைகளும் விழ ஆரம்பித்தன.

பெரும்பாடு பட்டு விழுந்த அந்த பணக்கட்டுகளையும் நகைகளையும்   பொறுக்கிக்கொண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்தவாறே இன்னும் அந்த சாமியாரை துரத்த ஆரம்பித்தான் தமிழன்.

ஒரு கட்டத்தில் களைத்துப் போன தமிழன்
சரி இதுவாவது மிஞ்சியதே
என்று கையில் இருக்கிற பணக்கட்டுகளையும் நகைகளையும் கட்டி அணைத்தவாறே  திரும்பினான்.

அப்போது, அங்கே நின்ற பெரியார் சொன்னார்.
அடேய் தம்பி , உன்னிடம் இருந்தவை என்னவெல்லாம் என்று உண்மை உனக்கு தெரியாமல் போனதே,
அதன் அருமை பெருமை தெரியாமல், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று அடுத்தவன் சொன்னதை நம்பி, 
உன் உடமைகளை கொண்டுபோய் அந்த சாமியாரிடம் கொடுத்துவிட்டு 
இப்படி எஞ்சியதில் திருப்தி அடைகிற நிலைக்கு வந்து விட்டாயே, இனியாவது நீ பெற்றதை காத்துக்கொள், சாமியார் பயல்களை நம்பாதே என்று சொல்லி அனுப்பினாராம்.

ஆமாங்க, அந்த காவிகள் சொன்னதில் நான் புத்திகெட்டுப் போனேன் என்று  புலம்பிக்கொண்டே போனானாம். 

இந்த கதை எங்கோ கேட்ட கதை மாதிரி இருக்கிறதா ?

மருத்துவ படிப்பு உரிமை  , ஜல்லிக்கட்டு , காவிரி , நியாயவிலைக்கடை என்று நம்மிடம் இருந்ததை எல்லாம் பறிகொடுத்து விட்டு பாஜக அரசிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிற தமிழன் கதை தான் இது . 

No comments: