Friday, November 08, 2019

திருவள்ளுவர் நாத்திகரா

திருவள்ளுவர் நாத்திகராக இருக்க முடியாதாம்.....
ஹலோ நாத்தீகம்னா என்னனு தெரிஞ்சிகிட்டு பேசுங்க.
நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என்று நாமாகவே தவறாக புரிந்துக்கொள்கிறோம்.
கடவுள் மறுப்புக்கு வேறு பெயர் உண்டு: நிரீஷ்வர்வாத்.
நிர்+ஈஷ்வர்+வாத்.

அப்படியானால் நாத்திகம் என்றால் என்ன?
நாத்திகம் = வேத மறுப்பு.
“நாஸ்தீக வேத நிந்திதஹ” என்றே குறிப்பிடுகிறார்கள்.
தட் மீன்ஸ், “உன் உடான்ஸ் வேதத்தை நான் மதிக்கல போடா!” என்கிற மனிதர்கள் = நாஸ்திகர்கள்.
Why take this stand?
Because வேதம்= பிறப்பின் அடிப்படைவாதம்.
உயர் தாழ்வு, ஜாதி, privilege, entitlement, Supremacy மாதிரியான விஷயங்களை கறாராக சொல்கிறது. நம்ப வைக்க முயல்கிறது. இத்தகைய மக்கள் விரோத அம்சங்களை ஏற்காதவரை வேதம் தண்டிக்க முற்படுகிறது.
எட்டாம் நூற்றாண்டின் classification படி ஆதிக்க மதங்கள்: சைவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், வைணவம். இவை எல்லாமே சதுர் வர்ணமெனும் racist கோட்பாட்டை ஏற்றவை.
அதே கிளாஸிபிகேஷன் படி நாத்தீக மதங்கள்: சார்வாகம், ஆசீவகம், பௌத்தம், ஜெய்னம். இவை எல்லாவற்றுக்குமான பொது அம்சம்: வேதம் விட்ட நான்கு வகை சமூக அந்தஸ்து கப்ஸாவை நம்பாமல் சொந்த அறிவை பயன்படுத்தியவர்கள். இதில் ஜயினர்கள் பிறவி, மறுப்பிறவி, மாதிரியான கருத்துக்களை வைத்திருந்ததால் அவர்கள் கொஞ்சம் வைதீகத்தோடு ஒத்துப்போனார்கள்.
ஆனால் ஆசீவர்கள் ஒரு போதும் ஒத்து போகவேயில்லை.
ஆதி தமிழரது மதம் ஆசீவகம்.
திருவள்ளுவர் ஆசீவக மதத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும்.
ஆசீவகர்களை சமணர் என்று அழைப்பர்.
இவர்கள் தத்துவம், வானியல், மருத்துவம் ஆகியவற்றில் ஜித்தர்கள். ஜித்து=சித்து.
திருநாவுக்கரசருக்கு சூளை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தவர் ஆசீவக துறவியர். இந்த துறவியரை தான் பிறகு சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றார்கள்.
இவர்கள் தீவர வேத எதிர்ப்பாளர்கள், அதனால் நார்தீகர்கள்!!
One lineல சொல்லணும்னா:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
vs
சதுர்வர்ணம் மயா சிருஷ்ட்டம்.
நீங்கள் எந்த பக்கம்?

No comments: