Wednesday, July 07, 2021

கம்போடிய புரோகிதர்கள்

 நம்ம ஊர் மாதிரியே கம்போடியாவிலும் புரோகிதர்கள் பக்தர்களிடமிருந்து கட்டுக் கட்டாக பணம் பெற்றுக் கொண்டு மந்திரம் ஓதுகின்றனர்! 




கம்போடிய தலைநகர் நாம் பென் நகரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பகோடா வளாகத்தில் Phen பாட்டி கோயில் உள்ளது. சுடச் சுட, பாட்டி கோயிலில் கண்கூடாக கண்ட காட்சி இது. இந்தியாவிலிருந்து கம்போடியாவிற்கு வைதீகம் மற்றும் பௌத்தம் ஏற்றுமதி ஆனாலும் கம்போடியர்கள்  தாய்த் தெய்வ வழிபாட்டை மறக்கவில்லை.தாய்த் தெய்வ வழிபாட்டின் எச்சமே Phen பாட்டி வழிபாடு.

சுருங்கச் சொன்னால் கம்போடிய வரலாறு என்பது பௌத்தத்திற்கும் பிராமணீய மதத்திற்கும் இடையில் நடந்த
சண்டைகளே. இந்தியாவைப் போல் அல்லாமல், கம்போடியாவில் பௌத்தம் பிராமணீயத்தை வென்று  தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

பிராமணீய மதத்தின் எச்சங்களை கம்போடியா முழுதும் இன்றும் காணலாம். கம்போடியர்கள் பிராமணீய மதத்தை இந்து மதம் என்று அழைப்பதில்லை. பிராமணீய மதம் என்றே அழைக்கின்றனர். இந்த விசயத்தில் அவர்களுக்கு உள்ள தெளிவு வியப்பை அளிக்கிறது.அங்குள்ள மியூசியம் முதல் சுற்றுலாத் தளங்களில் இந்து மதம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை, பதிலாக பிராமணீய மதம் என்றே எழுதி வைத்துள்ளனர்.
பழைய மரபு மாறாமல் இருப்பதற்காக மன்னரின் அரண்மனையில் இன்றும் வைதிக பிராம்மணர்கள் புரோகிதர்களாக பணியாற்றுகிறார்கள். முக்கியமான நாட்களில் மன்னனுக்காக சடங்குகளைச் செய்கிறார்கள்.

பிராம்மணீயம்,வைதிகம்,சனாதனம்,புரோகிதம் எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்த வடிவில் சென்றாலும் ஏமாற்றுவது,சுரண்டுவது,ஆதிக்கம் செலுத்துவது,அதிகாரம் செய்வது மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

No comments: