Monday, October 02, 2017

அரேஞ்சுடு மேரேஜுக்கான அடிப்படைக்காரணம்

சரியான ஆளுமையுடன் பிள்ளை வளர்க்கத் தவறுவதே அரேஞ்சுடு மேரேஜுக்கான அடிப்படைக்காரணம்.
குழந்தைக்கு பல் முளைக்கும் போது, நடக்கத் தொடங்கும்போது, மழலையாய் பேசத் தொடங்கும் போது மகிழ்வடையும் பெற்றோர், ஹார்மோன் முகிழ்த்து காதலிக்கத்தொடங்கும் போது கதறுகிறார்கள் என்றால்.... தவறு பிள்ளை மீது அல்ல. பெற்றோர் மீதே.
பிள்ளை வளர்ப்பு என்பதையே, இவர்கள் லாபம் ஈட்டும் தொழில் ஒன்றுக்கான முதலீடாகவே நினைக்கிறார்கள்.
கடைசிக்காலத்தில் என்னைக் காப்பாற்றுவானா?- என்ற ஒற்றை கேள்வி தரும் அச்சுறுத்தலின் அடிப்படையில் தான் இவர்களின் மொத்த பிள்ளை வளர்ப்பின் லட்சணமும் அமைந்திருக்கிறது.
குழந்தைகளை தன் காலில் நிற்க விடாமல் மனரீதியா - உடல் ரீதியான சவலைகளை உருவாக்கும் நம் நாட்டு பிள்ளை வளர்ப்பு, பெற்றோர்களின் வக்கிர எண்ணங்களின் வடிகாலாய் அமைந்திருக்கிறது. இதனை ப்ளாக் மெயிலின் ஒரு வகையாகவே கணக்கில் கொள்ள முடியும்.

No comments: