Wednesday, January 31, 2018

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உங்கள் தலைவரே உட்கார்ந்து தான் இருக்காரு

நண்பர்களுடன் அண்ணா நகர் பூங்காவில் அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்தப்போது, என் பள்ளிக்கால ஆசிரியரிடமிருந்து whatsAppல் ஒரு வீடியோ செய்தி. என்னை வளர்த்து ஆளாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர். பார்ப்பனர்தான், ஆனால் மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரிந்தவர். தூரத்திலிருந்து என் திராவிட அரசியல் சார்ந்த நிலைப்பாடுகளை அவர் கவனித்துவந்தாலும், இத்தனை ஆண்டுகளில் அவர் எனக்கு அனுப்பிய முதல் குறுஞ்செய்தி இதுதான்.
"மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்,
ஏம்ப்பா திராவிட பகுத்தறிவு ஜீவிகளே 2010 செம்மொழி மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உங்கள் தலைவரே உட்கார்ந்து தான் இருக்காரு அதுக்கு முதலில் பதில் சொல்லுங்கப்பா" (வீடியோ முதல் கமெண்டில்)
அதனைத் தொடர்ந்து அவரோடு நடந்த சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றத்தை அப்படியே தருகிறேன்:
நான்: ஹாஹா 😃 மேடம் இதுப்போன்ற அவதூறுகளுக்கு நீங்களுமா ஏமாறுகிறீர்கள்?
2009 பிப்ரவரி மாதத்திலிருந்து தலைவர் கலைஞரால் வயது மூப்பின் காரணமாகவும், முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையின் காரணமாகவும் நடக்கவோ, நிற்கவோ முடியாமல் போனது நாடறிந்த செய்தி. (அவர் வயதிற்கு நாமெல்லாம் உயிரோடு இருப்போமா என்பதே சந்தேகம்)
85வயதில் உடல் ஆரோக்கியமில்லாத ஒரு முதியவர் உட்கார்ந்திருந்ததும், நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் விஜயேந்திரன் கொழுப்பெடுத்து அமர்ந்திருந்ததும் ஒன்றா மேடம்? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்காத விஜயேந்திரன் தேசிய கீதத்திற்கு நின்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவே தற்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் தங்கி தீவிர சிகிச்சைப் பெற்றுவரும் முதியவர் ஜெயேந்திரன் உடல்நலம் காரணமாக எழாமல் போயிருந்தால் எந்தக் கேள்வியும் எழுந்திருக்காது.
அவர்: ஏம்மா, அப்ப பக்கத்தில் உட்கார்ந்திருப்பதும் உடல் நலம் இல்லாதவரா? நியாயம் என்பது அனைவருக்கும் பொதுதானே வக்கீல் சார்!
நான்: மேடம் எங்கள் பேராசிரியர் அன்பழகனார் உட்பட அனைவரும் நிற்கிறார்கள். கலைஞருக்குப் பக்கத்தில் சந்தனப் பொட்டு வைத்துக்கொண்டு ஒருவர் உட்கார்ந்திருப்பதை நானும் கவனித்தேன். அவர் தி.மு.க நபர் அல்ல. அவர் யாரென்றும் எனக்கு தெரியவில்லை. அப்படியிருக்கும்பட்சத்தில் நான் எப்படி அவருக்காக வாதிடமுடியும்?
நீங்கள் அனுப்பியது எங்கள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றியது. அதற்குரிய விடையை நான் அளித்துவிட்டதாகவே கருதுகிறேன் மேடம் 
அவர்: அப்ப உடம்பு சரியில்லை என்றால் விதிவிலக்கு உண்டா வக்கீல் சார்? ஏன் உங்கள் தமிழினத் தலைவர்கள் உட்கார்ந்தருப்பது தவறு என்று மேடையிலேயே சுட்டிக் காட்டவில்லை. (நான் வக்கீலை உருவாக்கிய ஆசிரியையாக்கும்)
நான்: yes madam.. Law exempts persons with physical infirmities and ailments. Even central Govt notification on 'National Anthem' issued in 2015 and various court verdicts, clearly exempts aged persons and other special categories of persons. Above all, no reasonable person will expect an old man or a phyiscally challenged person to stand up when they actually cannot 😃
ஆனால் விஜயேந்திரன் விசயத்தில் அவரிடம் இதுப்போன்ற எந்ண நியாயமானக் காரணமும் இல்லையே.
So here, you are trying to defend the indefensible ma'am 😉
கண்டிப்பாக என்னை ஆளாக்கியவர்களுள் ஒருவர் நீங்கள். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் தாய்(நீங்கள்) பத்தடிப் பாய்ந்தால், குட்டி(நான்) பதினாறடிப் பாய்வதுதானே உங்களுக்கும் சிறப்பு? 😍
அவர்: ஹாஹா. விவாதம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.
Any how, உன் வாதத்திறமைக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
நான்: மிக்க நன்றி மேடம்
-------------------------------------------------------------
சொல்லப்போனால் இதில் என் வாதத்திறமை என்று பெரிதாக எதுவுமேயில்லை என்பதை நானே அறிவேன். உள்ள உண்மைகளை உள்ளபடி சொல்லியிருக்கிறேன். அவ்வளவே!
ஆனால், திராவிட இயக்கத்தைப் பற்றி இந்த சங்கிகள் பரப்பும் அவதூறுகள் எவ்வளவு மொன்னைத்தனமாக இருந்தாலும், அதற்கு பலியாக இங்கு ஏராளமான படித்த மனிதர்களும், அறிவாளிகளும்கூட தயாராக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுதான் இது.
மெத்தப்படித்த அறிஞர் ஒருவர் இவ்வளவு பலவீனமான ஒரு மொக்கை செய்தியை, ஏதோ கலைஞருக்கு எதிரான நெத்தியடி ஆவணம் கிடைத்துவிட்டதாக நம்பி எனக்கு அனுப்புகிறார் என்றால், இவர்களை நினைத்துப் பரிதாபப்படவே தோன்றுகிறது.
திராவிடப் பகுத்தறிவாளர்களான நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

No comments: