Monday, January 29, 2018

மெக்காலே கல்வித்திட்டம்

மெக்காலே கல்வித்திட்டம் ஒரு அடிமை கல்வித்திட்டம் என அந்த கல்வியை கற்றே முன்னேறிய ஒரு கூட்டம் ஒரு உள்நோக்கத்துடன் குறை கூறிக்கொண்டு திரிவது வேடிக்கையாக இருக்கிறது.
இங்கு பலபேர் தலையில் தூக்கி கொண்டாடும் அய்யா அப்துல் கலாமே அந்த அடிமைக்கல்வி ப்ராடக்ட் தான் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.ஒரு சமூகத்தை தவிர மற்றவர்கள் கல்வி கற்க இருந்த தடையை உடைத்த ஆங்கிலேயர்களின் வழியில் அதனை தொடர்ந்து தமிழகத்தில் கல்வி மலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட பேரியக்கத்தின் அரும் சாதனை.
கடும் வெய்யில், குளிர்,பனியில் உன்னை வெளியே நிறுத்தி வைத்த கூட்டத்திற்கு எதிராக உனக்கு வீட்டின் கதவை திறந்துவிட்டவன் ஆங்கிலேயன், நீங்கள் இப்போது இருக்கும் அவன் திறந்துவிட்டிருக்கும் கல்வி எனும் வீட்டை சீரமைத்து கொள்ளவேண்டியது நாம்தானே தவிர, ஆங்கிலேய ர்களோ,மறைந்த மெக்காலேவோ அல்ல.
அதிலும் குறிப்பாக இன்று தமிழகத்தில் நம் உயர் கல்வியை,மருத்துவ கல்வியை எனும் நம் வீட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சியாக NEET என்ற நுழைவு தேர்வின் மூலம் அழிக்க நினைக்கும் மத்திய காவி அரசாங்கதை பார்த்து மக்களாகிய நாம் சுரணையற்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது.
மாநிலத்தை ஆளும் அடிமை அதிமுக எடுபுடிகளின் அரசு தமிழக சட்டமன்றத்தில் NEET தேர்வுகெதிராக சட்டமியற்றிவிட்டு,அதனை பற்றி சிறிதும் கவலைபடாமல்,அதனை சிறிதும் மதிக்காத மத்திய அரசை நோக்கி,தன் எஜமானர்களை நோக்கி எந்த கேள்வியும் வைக்காமல்,மாநில சுயாட்சியை பறிக்கொடுத்துவிட்டு,மத்திய அரசின் 400-க்கும் மேற்பட்ட NEET பயிற்சி மையங்களை தமிழகத்தில் திறக்க பரபரப்பாக அலைகிறது என்பதை புரிந்தாலே தமிழகத்தில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்ற தெளிவு தமிழக மக்களுக்கு கிடைக்கும் .

No comments: