Monday, July 16, 2018

உலகக் கால்பந்துப் போட்டியும், அக்கிரஹார அழிச்சாட்டியமும்!

உலகக் கால்பந்துப் போட்டியும், அக்கிரஹார அழிச்சாட்டியமும்!
...தேசிய கால்பந்து தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் தேசிய கால்பந்து அணி வீரருமான சய்யத் நயிமுதீனின் கூற்று மெய்யாக்குகிறது. “நான் தேசிய கால்பந்து அணிக்குப் பயிற்சியாளராக இருந்தபோது பயிற்சியின்போது விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பான பாட்டில் குடிநீர், பழ ரசம் போன்றாவற்றுக்குக்கூட அதிகாரிகளிடம் போராடித்தான் வாங்க வேண்டியிருந்தது. வெறும் வயிற்றுடன் கால் பந்து விளையாட முடியுமா?” அதிகாரிகளில் மிகப் பெரும்பான்மையினர் பார்ப்பனரே என்பதுதான் இந்நிலைக்கான அடிப்படை.
... Indoor Games எனப்படும் சற்றுக் குறைந்த உடல் உழைப்புள்ள விளையாட்டுகளில் வென்று விளையாட்டு ஒதுக்கீட்டில் மேற்படிப்பு களைப் படித்து அல்லது இதையே தகுதியாக அமெரிக்கா போன்ற நாடுகளில் காட்டி அங்கு செட்டிலும் ஆகின்றனர். இது பெரும்பான்மையான பார்ப்பனரல்லாதோரால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத டெக்னிக். அது மட்டுமல்ல பார்ப்பனர்களின் வெளிநாட்டுத் தொடர்புகள் போல நமக்குக் கிடையாது என்பதும் இங்குள்ள சமூகச் சூழல்.
...தற்போது தரமான மாணவர்கள் கிடைத்தாலும் அவர்களை உருவாக்க கல்விக்கான நேரங்கள் அனுமதிப்பதில்லை. பெற்றோரும் கல்விக்குச் சமமாக இவ்விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒன்பதாம் வகுப்பு வந்தவுடனேயே அம்மாணவன் கல்விக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் இவ்விளையாட்டுகள் ஊடகங்களால் முதன்மைப் படுத்தப்படுவதில்லை. 

No comments: