Monday, July 16, 2018

நல்ல பொருளாதார ஆதரவும் உணவு சுதந்திரமும் தேவை....அதை இந்துத்துவ நாட்டில் ரோம்ப கஷடம்.

ஹீம தாஸ் வெற்றியும் இந்தியாவின் விளையாட்டு துறை தலைநகரமாக மாறி இருக்கும் வட கிழக்கு மாநிலங்கள்
ஹர்பாஜன் சிங் --BBC NEWS
"135 கோடி மக்கள் வாழும் நாட்டில் கால்பந்தில் சாதிக்கமுடியாமல் வெறும் இந்து முஸ்லீம் சண்டை போட்டுகொண்டு இருக்கிறோம்..."
Mr.பஜ்ஜி உண்மை தான் மறுக்கவில்லை...அதை விட மிக முக்கியமானதை விடுவிடீர்கள்....அது உணவு and அரசங்கத்தின் வழியான பொருளாதர& Private SPONSORSHIP ஆதரவு ....கால்பந்து மட்டுமல்ல அத்லெடிக்ஸ் வீரர்களுக்கு BEEF PORK and கடல் உணவு மிக அத்தியாவசியமானது...புரதசத்து அதிகம் தேவை..
உதாரணமாக ஒரு கால்பந்து வீரன் ஒரு நாள் ஐந்து வேலை உணவு உன்ன வேண்டும்...அதற்கு நல்ல பொருளாதார ஆதரவும் உணவு சுதந்திரமும் தேவை....அதை இந்துத்துவ நாட்டில் ரோம்ப கஷடம்....ஸ்டாமினா குறைவாக தேவைப்படும் கிரிக்கெட் மட்டுமே பணக்கார , முதலாளிகளின் மீடியாக்களின் ஆதரவு... அது ஏன் என்றால் உண்மை எல்லாருக்கும் தெரியும்..
இன்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பெருமை பட வைக்கும் விளையாட்டு வீர்கள் பெரும்பாலும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து தான் வருகிறார்கள்... வட கிழக்கு மாநிலங்கள் BEEF and PORK பிரதான உணவுகள்...கிறிஸ்துவர்கள் அதிகம் ...அதுமட்டுமல்ல மலை தவளை உணவு & மலைப்பாங்கான இயற்கையான உணவுகள் அங்கு அதிகம்...அதற்கு ஆதாரமான இருப்பது மாசுபடாத பிரம்மபுத்திரா நதி மற்றும் அதில் வரும் மீன் உணவுகள்..வட கிழக்கு மாநிலத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இயற்கையாக விளையாட்டு துறையை தேர்ந்தெடுப்பார்கள்..மத்த மாநிலத்தில் விளையாட்டு துறையை வீணான துறை என்று அவமானப்படுத்துவது இந்த ஏழு மாநிலங்களில் நடக்காது...
Khelo India program மூலம் அங்கு வெவேறு விளையாட்டை ஊக்கப்படுத்தும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை கொஞ்சம்கொஞ்சமாக மேம்படுத்திவருகிறார்கள்..பாக்ஸிங் வீராங்கனை மேரிகோம் மற்றும் கால்பந்து ஸ்டார் பாய்ச்சுங் பூட்டிய போன்றவைகள் இங்கு ரோல் மாடல் மட்டுமல்ல...அவர்கள் தங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள்..
எனக்கு ஒரு ஆசை நான் இறப்பதற்கு முன் இந்தியாவில் அதுவும் வடகிழக்கு மாநிலத்தில் இருக்கும் அத்தனை விளையாட்டு துறை அம்சங்களை பெற்று இருக்கும் வட சென்னையில் ஒலிம்பிக் அல்லது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த வேண்டும்...முதல் ஐந்து இடத்திற்குள் தங்க பதக்க வேட்டையில் இந்திய வந்திருக்க வேண்டும்.....நடக்குமா தோழர்களே..

No comments: