Monday, August 20, 2018

சென்னை மாநகராட்சி மழை வெள்ளங்கள்

# வெள்ளம்
பல மழை வெள்ளங்கள் சென்னையை தாக்கினாலும் 2015 தவிர மற்ற சமயங்களில் சென்னை மாநகராட்சி சிறப்பாகவே செயல்பட்டதென்று சொல்லலாம். ஆது எந்த திராவிட கட்சியாய் இருந்தாலும் சரி.
புயல் சின்னம் ஏற்பட்டவுடனே கொடியேற்றி மக்களை அலர்ட் செஞ்சு, மாநகராட்சி பள்ளிகளை தயார் படுத்தி, உணவு, மற்றும் தேவையான பொருட்களை சேமித்து, ப்ளீச்சிங் பவுடர், காலரா மாத்திரை, மருத்துவக்குழு என்று பக்காவாக அனைத்தும் தயார் நிலையில் வைத்திருப்பர். எந்த ஏரியாக்களில் தாக்கமிருக்கிறதோ முன் எச்சரிக்கை நடவடிக்கையாய் கரண்ட் கட் பண்ணிவிடுவார்கள்.
பிரதான சாலைகளில் மரம் விழுந்தால் மின்னல் வேகத்தில் அப்புறப்படுத்துவார்கள். லோக்கல் கவுன்சிலர்கள் ஒரு கூட்டத்துடன் சற்றிக்கொண்டே அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பார்கள். ஜுலை ஆகஸ்ட் மாதமே சாக்கடை தண்ணீர் போகும் குழாய் அடைப்புகளை எடுத்து விடுவார்கள். இப்படி சுறுசுறுப்பாக பணிகள் பார்த்த சென்னை மாநகராட்சிக்கு சோதனையாய் வந்தது 2015 டிசம்பர் சென்னை மழை வெள்ளம் யாருமே அனுமானிக்க முடியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டமே. CNN BBC கூட இவ்வளவு பெரிய மழை பெய்யும் என்று சொல்லவில்லை. கடும் மழையால் செம்பரம்பாக்கம் ரொம்பி உத்தரவு சரிவராமல் கோட்டைவிட்டது தான் உயிர் உடமை சேதங்களுக்கு காரணமாய் அமைந்தது.
ஆனால் வெள்ளத்தின்போது சின்ன சின்ன சூப்பர் மார்க்கெட் அநியாய விலை வைத்து அடித்த கொள்ளை அய்யய்யோ. கேவலம். எரியறவீட்ல பிடிங்கின மாதிரி பிடிங்கினாங்க. நம்ம ஜனங்களும் அடுத்தவனும் வாழணும் என்று நினைக்காமல் ஷெல்ப்ல இருந்த அத்தனையும் பில்போட்டு பணத்திமிர்ல அனைத்தையும் அள்ளிக்கொண்டு போனது கசப்பான உண்மை. ஆனால் அதற்கு பிறகு உடனடி உதவி வந்தது, உணவு, பால், தண்ணீர் என்று லாரிகளில் வந்து வீடுவீடாக வழங்கினார்கள். கரண்ட் வரத்தான் தாமதமாகியது. ரேடியோவின் வீச்சும் உதவியும் அப்போதுதான் பலருக்கு தெரியவந்தது. பிறகு மாநில மத்திய போர்கால நடவடிக்கையில் சென்னை மீண்டது.
அனைவர் முகத்திலும் ஸ்மைல் "ஸ்டிக்கர்😁😂" அனைத்தும் சுபமே.
உங்க அனுபவம் என்னவோ.

No comments: