Saturday, April 27, 2019

பெரியார் கன்னடரா? பைத்தியங்களின் முன்னோடி பார்ப்பான் வ.வே.சு ஐயரே

"பெரியார் கன்னடரா"
  "பைத்தியங்களின் முன்னோடி பார்ப்பான் வ.வே.சு ஐயரே"

ஒரு பள்ளிக்கூடத்தை காங்கிரஸ்க்காரர்கள் ஆரம்பித்தார்கள், ஆனால் காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்கள் பணம் தரவில்லை. பார்ப்பனரல்லாத மக்களே பள்ளிக்கூடம் நடத்த பணம் கொடுத்தனர்.
பள்ளிக்கூடம் நடத்த நிலத்தை வாங்கிக் கொடுத்தவர் வைசு.சண்முகம் செட்டியார் 3000 ரூபா கொடுத்து(1920 களில் 3000 ரூபா)..காங்கிரஸ் 10000 ரூ நிதி கொடுத்து நடக்கிறது.. 5000 கொடுக்கப்பட்டுவிட்டது..அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பெரியார்.செயலாளர் வரதராஜுலு நாயுடு..மீதி 5000 தரும்போது வந்தது பிரச்சினை..

வ.வே.சு ஐயர் தான் அப்பள்ளியை நடத்துகிறான்..
பார்ப்பன மாணவர்கள் உள்ளே உட்கார்ந்து சாப்பிடுவது,
பார்ப்பனரல்லாத மாணவர்கள் வெளியே உட்கார்ந்து சாப்பிடுவது  மற்றும்
சாமி கும்பிடுவதில் பார்பனர்கள் சமஸ்கிருத சுலோகம் சொல்லி வழிபடுவது,
பாரப்பனரல்லாதவர்கள் தேவாரம்,திருவாசகம் பாடி வழிபடுவது..*நம்ம பசங்க சமஸ்கிருத மொழியை உச்சரிக்கவே அனுமதி இல்லை..இதனால் பெரியார்
ஏண்டா, எங்க நிதியால நடக்குது எங்க மாணவர்களை தனிமைபடுத்தறீங்களா என்று அங்கு நடந்த அநீதிகளை எதிர்த்து வரதராஜுலு நாயுடு, திரு.வி.க அவர்களோடு இணைந்து போராடுகிறார்.5000 தர மறுத்துவிட்டார்..அதை நடத்தி வந்த பார்ப்பான் வ.வே.சு ஐயர் மறுக்கிறான்...இறுதியாக பள்ளிக்கூடம் மூடப்படுகிறது...
உடனே தமிழ்நாட்டில் நடக்கிற குருகுல பள்ளிக்கூடத்தை
 ஆந்திராவை சார்ந்த வரதராஜுலு நாயுடுவும்,
கர்நாடகாவைச் சார்ந்த கன்னடரானராமசாமி நாயக்கரும் பேசுவது என்ன நியாயம் னு முதன் முதலாக கேட்கிறான்.. (இவன் தமிழ்நாட்டு பார்ப்பானாம்).. இப்போது சில பைத்தியங்கள் இதையே சொல்லித் திரிகிறது..

குறிப்பு: பள்ளியில் நடந்த பிரச்சனை வேறு வ.வே.சு ஐயர் திசை திருப்பிய காரணம் வேறு ..புரிந்து கொள்வோம்..

No comments: