Tuesday, March 26, 2019

#திராவிடம் அறிவோம் (84)

அரசு ஊழியர்கள் ஏன் திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் ?

1972-ஆம் ஆண்டுக்கு முன்னர், அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் நடத்தை பற்றிய இரகசியக் குறிப்பேடு முறை இருந்து வந்தது. இதன் மூலம் தனக்கு வேண்டாதவர்களைப் பற்றி கண்டதையும் எழுதி பலரது பதவி உயர்வைத் தடுக்க இக் குறிப்பேட்டு முறை பயன்பட்டது. (அந்நாளில் அரசுப் பணிகளில் பெரும்பான்மையாக இருந்த பார்ப்பனர்கள் இதைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் பதவி உயர்விற்கு வருவதைத் தடுத்தனர்). இந்த இரகசியக் குறிப்பேட்டு முறையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்தது. அக்கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் கலைஞர் இரகசியக் குறிப்பேட்டு முறையை நீக்கி 1972 ஏப்ரல் முதல் வாரத்தில் ஆணை பிறப்பித்தார்.


அரசு அலுவலர்கள் பணிக் காலத்தில் இறந்துவிட்டால், அவர்கள் குடும்பத்திற்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ. 10,000 வழங்க ஆணையிட்டவர் முதல்வர் கலைஞர்.

மேலும், அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறந்தால், அவர்கள் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் திட்டத்தை 1972-ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் கலைஞர் தொடங்கி வைத்தார்.


இவையெல்லாம், அரசு அலுவலர்கள் நலன் கருதி, இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் முதன்முதலாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.

No comments: