Wednesday, June 14, 2017

நம்மாழ்வார் என்னும் டுபாக்கூர் !

நான் தொடர்ந்து நம்மாழ்வாரை விமர்சிக்கிறேன் என்று பல பேர் பொங்குகிறார்கள் !
எனக்கு ஒரே ஐடியாதான், மக்களை மூடராக்கும் யாராக இருந்தாலும் சரி, ஏதுவாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய புனித பிம்பங்கள் இருந்தாலும் சரி அதை அடித்து நொறுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன் !
நம்மாழ்வார் பற்றி பல கேள்விகள் எழுப்பி உள்ளேன் அதற்கு பதிலளிக்காமல் கொய்யா முய்யோ என்று கத்தினால் சட்டை செய்யாமலே கடந்து செல்வேன் .
நம்மாழ்வாரை பற்றி சொல்ல நெறைய இருக்கிறது , அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து மேய்யப்படும் ...இந்த பதிவில் அவர் ஏன் ஒரு டுபாக்கூர் மற்றும் மக்களை எப்படி முட்டாளாக்குகிறார் என்று எளிமையாக விளக்க முற்படுகிறேன்.
இந்த காணொளியை பாருங்கள்
https://www.youtube.com/watch?v=MindIXXcF4M&t=85s
.... இதில் நம்மாழ்வார் கூறுவது ...
நீங்கள் சாணி, புளுக்கை, மூத்திரத்தில் தயிரை கலந்து தினமும் காலை மாலை இப்படி ஒரு அம்பது சுத்து அப்படி ஒரு அம்பது சுத்தும்போது அண்டை வெளியில் இருக்கும் காஸ்மிக் கதிர்கள் அதில் செல்லும் இப்படி இருபத்தியொரு நாட்கள் கலக்கணீங்கன்னா நீங்க ஒரு டாக்டர் , உங்க கைல மருந்து.
பஞ்சகாவியா குடித்தீர்கள் என்றால் மூக்கு கண்ணாடி போட தேவை இல்லை.
பஞ்ச கவ்யம் பயிர்ல இருந்து பூனை,நாய்,மனிதன் என எல்லா வகையான ஜீவராசிகளின் நோய்களையும் குணப்படுத்தும், சளியிலிருந்து எய்ட்ஸ் வரை அணைத்தையும் சரிசெய்கின்றது கான்செர் உட்பட.
இதை காலையில் 30ml பல் விலக்கிவிட்டு குடிக்கவும் என்று தொடர்ந்து உளறுவார் !
ஒரேய சிம்பிள் கேள்வி ... அதான் சளியில் இருந்து எய்ட்ஸ் வரை குணப்படுத்த முடியுமே ! அனைத்து கிருமிகளையும் கொல்லுமே அப்பறோம் எதுக்கு பல்லு விலக்கிவிட்டு அந்த கருமத்தை குடிக்கணும் ? அப்படியே குடிக்கலாமே !
இந்த மாறி கோமாளித்தனமாக பேசுபவர்களிடம் ஒரே கேள்விதான் ..அதான் அந்த காலத்தில் பஞ்சகாவ்யம், சாணி தெளித்து கோலம் போட்டு கொண்டு கிருமிகளை அண்டவிடாமல் இருந்தீர்களே அப்பறோம் ஏன் கொத்து கொத்தாக கிராமம் கிராமமாக காலரா பிலேக் சின்னம்மை போன்ற நோய்களில் செத்தீர்கள் ?
இந்த காலத்தில் பல நோய்கள் இருந்தாலும் ஒரு கிராமமே ஒரு நோயினால் குறிப்பாக காலரா போன்ற நோயினால் அழிந்ததாக வரலாறோ ஏன் ஒரு செய்தி துணுக்கு கூட யாராலும் சமர்ப்பிக்க முடியாது. ஆனால் அந்த காலத்தில் ஒரு கிராமமே ஒரு நோயினால் அழிவது சகஜம் இதற்கு நம் இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்களே சான்று ! ராஜா கதைகளில் கூட அவ்வாறு குறிப்பிட்டுஇருக்கும்.
இந்த மாறி உளறுவாய்கள் உளறிவைத்து விட்டு சென்று விடுவார்கள் அப்பாவி மக்களே இதனால் சாவார்கள்.
அப்பறோம் இந்த திமுககார்கள் என்னமோ நம்மாழ்வார் திமுக என்று பீத்திக்கொள்கிறார்கள், மக்களை மூடர்களாக்கும் ஒருவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதில் என்ன பெருமை என்று எனக்கு தெரியவில்லை...
எந்த வித அடிப்படை ஆதாரம் இல்லாமல் கேன்சரை குணமாக்கும் எய்ட்ஸை குணமாக்கும் என்று சொல்லி மக்களை ஏமாற்றினால் அவர்களை மனிதமற்ற சமூக விரோதிகள் என்றே அழைக்க முடியும்.
என்ன நம்மாழ்வார் இங்கு பிறந்துததுனால் பஞ்சகவ்வியம் விற்றார் ...இதுவே பிரேசிலில் பிறந்து இருந்தால் அமேசான் காடுகளில் மட்டுமே கிடைக்கும் எர்வாமேட்டின் விற்றுக்கொண்டிருப்பார் !
மூத்திரம் குடிக்காமல் மூளையை பயன்படுத்தவும், மனித மூளை என்பது 3 பில்லியன் வருட பரினாம வளர்ச்சியின் உச்சி ! அதில் தயவுகூர்ந்து மூத்திரம் சாணி ஆட்டு புழுக்கையெல்லாம் தயிர்ல மிக்ஸ் பண்ணி அடிக்காதீங்க !
திரும்பவும் சொல்கிறேன்...
புனித பிம்பங்கள் அடித்து நொறுக்கப்படும் !

No comments: