Thursday, March 21, 2019

சில்லரை பேச்சாளர் சைமன் இப்ப படியளக்க ஜெ இல்லை

தமிழகத்தில் முதல் சில்லரை பேச்சாளர் சைமன் இப்ப படியளக்க ஜெ இல்லை. ஆதலால் இப்ப யாருமே தமிழரில்லை என்பது இவரது கோஷம்.

அவர்:-இந்தி மொழி திணிப்பை எதிர்த்ததில் 1%கூட "இந்திமொழியர்" திணிப்பை எதிர்ப்பதில் காணோம்!
நான்:- அதான் அதை மொத்தமாக சீமான் கூட்டம் சொல்கிறதே! "பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதே மானுட சிறப்பு!

அவர்:-மொரட்டு முட்டு. சொந்த வீட்டிலேயே அகதிகளைப்போல முகாம்களில் அடைத்து வைத்துள்ள தொப்புள்கொடி உறவுகளுக்கு இது பொருந்தாதா தோழர்?
நான்:- "தொப்புள்கொடி" உறவு வாதம் எல்லாம் உணர்வும், வரலாறும் சம்பந்தப்பட்டது! தற்போது நாம் சார்ந்திருக்கும் ஒன்றியத்தின் படி அவர்கள் இன்னொரு நாட்டில் இருந்து வந்து சட்டப்படி அல்லாமல் குடியேறியவர்கள் நீங்கள் சொல்வது போல் அகதிகள் இந்தியாவில் நம் தமிழகத்தில் வந்து குடியேறியவர்களை போல உலகில் எல்லா நாடுகளிலும் ஏறத்தாழ குடியேறியிருக்கிறார்கள் சட்டமும் வெளியுறவு துறையும் தான் முடிவு செய்யும்! இது உங்களுக்கு தெரியாததும் அல்ல- தொப்புள்கொடி என்று நீங்கள் சொல்வது தான் போலித்தனமாக தெரிகிறது நான் முட்டு கொடுக்கவில்லை நிதர்சனத்தை சொல்கிறேன்!

அவர்:- நேர்மையாக கூறுங்கள். தொப்புள்கொடி என்கிற போலித்தனத்தை அண்ணாவும் கலைஞருமே கூறியுள்ளார்கள்.
நான்:-அதில் தவறென்று சொல்லவில்லை! இன்று திடீர் போராளிகள் அதை பயன் படுத்துவது நெருடல், அண்ணா கலைஞர் இப்பொது உங்களுக்கு தேவை படுகிறார்கள், உங்கள் கருத்துக்கு பலம் சேர்க்க எப்பொழுதும் பெரியார் சொன்னதை சொல்வீர்களே! அதையும் சொல்லுங்கள் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்" என்பதையும் சொல்லுங்கள் .

முடிவாக இந்த அபாயகரமான சூழலில் தமிழகம் இருக்கும் தருவாயில், அவர் சொல்ல வருவது காங்கிரஸ்சும் வேண்டாம் பிஜேபி யும் வேண்டாம் அவர்களை துடைத்து எறியவேண்டும் என்பதே! அல்லது நோட்டா என்பதே! இவர் திமு காந்தி யின் தொண்டராக இருப்பார் என்று அவதானிக்கிறேன்.

வாக்களில்லாமல் இருப்பதும் நோட்டாவுக்கு போடணும் என்பதும் ஒன்று தான் "விழலுக்கு இறைத்த நீர்" பிஜேபிக்கு எதிராக யார் மூலம் நமக்கு நல்லது நடக்கும் காங்கிரஸ் சை தவிர வேறு வழியில்லை!

அதான் வலிமையான அகில இந்திய கட்சியை காங்கிரஸ் சை ஆதரிக்கிறோம்.

உள்ளபடியே "பிஜேபி-காங்கிரஸ்" எல்லாம் அவர்கள் வாயால் சொல்வதற்கு தான், வெறும் திமுக மீதான காழ்ப்புணர்வு வாதமே!

நல்லது நீங்கள் அப்படிய இருந்துகொள்ளுங்கள் நன்றி!

எனக்கெல்லாம் என் தமிழ்நாடு தான் முதன் முக்கியம்!
சுயநலம் தான் எங்களுக்கு .....

No comments: