Saturday, May 25, 2019

புனிதம்

புனிதம்
©©©© கனல் ©©©©

பூணூலின்  கை பிடித்து இறங்கியது புனிதம்
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை சிறீயென ஆக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
நீரை ஜலமாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
கதிரவனை சூரியனாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
ஐயாவை ஜீயாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
மழையை வருணணாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
தீயை அக்னியாக்கி
குண்டத்தை யாகமாக்கி
காற்றை வாயுவாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
பூவை புஷ்பமாக்கி
பூசனையை பூஜையாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
படையலை நைவய்தியமாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பிள்ளைப் பேறை பிரசவமாக்கி
பிணத்தை சவமாக்கி
மக்களை ஜனங்களாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
பிறந்தநாளை ஜெயந்தியாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
அறிவைப் புத்தியாக்கி
ஆசானைக் குருவாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
அவையை சபையாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
இசையை சங்கீதமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
ஆடலை நடனமாக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
அழகை சுந்தராக்கி
முகத்தை வதனமாக்கி
முடியை கேசமாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
உண்மையை சத்தியமாக்கி
நல்லதை புண்ணியமாக்கி
கெட்டதை பாவமாக்கி
கொடையை தர்மமாக்கி
அமிழ்தை  அமிர்தமாக்கி
நஞ்சை விஷமாக்கி
சான்றை ஆதாரமாக்கி
பெரியதை மஹாவாக்கி
சிறியதை சோட்டாவாக்கி
செருப்பை ரட்ஷையாக்கி
ஊர்வலத்தை உற்சவமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
உலகத்தை லோகமாக்கி
மாட்டைக் கோமாதாவாக்கி
மூத்திரத்தை கோமியமாக்கி
என்னைச் சூத்திரனாக்கி
உன்னைப் பஞ்சமனாக்கி

பூணூலின் கை பிடித்து இறங்கியது புனிதம்
பூணூல் அறுபடாதவரை இறங்கிக் கொண்டு தான் இருக்கும் புனிதம்

படித்ததில் மனம் வெந்தது....

No comments: