Sunday, May 21, 2017

2004 பிரபாகரன் பேட்டி

2004ல் பிரபாகரனை ஒரு ஊடகவிய‌லாளர் பேட்டி எடுத்தார், தனிபட்ட பேட்டி அது, அதில் பிரபாகரன் நிறைய பேசினார், அரசியல் துளியும் இல்லை, சிங்கள பேரினவாதம் அது இது என சொல்லிகொண்டே இருந்தார்
அந்த நிருபர் கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டார்
"ராஜிவ் கொலைக்கு பின் இந்தியாவில் புலி ஆதரவு எப்படி இருக்கின்றது?"
எம்மீதான தடையினை நீக்க இந்தியாவில் தமிழ்மக்கள் போராடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
ராஜிவ் கொலையால்தானே தடை வந்தது? அது பற்றி?
(இதற்கு ஒருநாளும் பிரபாகரன் பதில் சொன்னதே இல்லை,, மாறாக இப்படி இழுத்தார்)
நாம் இந்தியாவினை நட்பு நாடாக பார்க்கின்றோம், சிங்களனை விட புலிகளே இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்க முடியும், எம்மீதான தடையினை நீக்க வேண்டும்
அய்யா அந்த ராஜிவ் கொலைபற்றி...
நாம் இந்தியாவிற்கு நேசகரம் நீட்டுகின்றோம்
இந்தியாவில் புலிகள் தடை நீங்குமா? எப்படி?
நாங்கள் இப்பொழுது இறுக்கமான அமைப்பு அல்ல, பழைய சம்பவங்களை வைத்துகொண்டு இப்பொழுது எமக்கு தீர்ப்பிட கூடாது, இந்தியா என் நண்பன் கிட்டுவினை கொன்றது அதற்கு நாங்கள் பழிவாங்கயில்லை , பொறுமை காக்கின்றோம்..
(என்னது இந்தியாவினை பழிவாங்குவாரா??.. இன்னும் தொடர்ந்தார் பாருங்கள்)
அண்ணன் கோப்பால்சாமி அவர்களும், பழநெடுமாறன் போன்றவர்களும் இந்தியர்கள்தான், அவர்கள் எம் போராட்டத்தின் நியாய தர்மங்களை புரிந்துகொண்டு எமக்காக போராடுகின்றார்கள், அவர்களால் எம்மீதான தடை நீங்கும்
இதற்கு மேல் என்ன சொல்ல, புலிகள் எப்படி அழிந்தார்கள் என இனியும் சொல்ல என்ன இருக்கின்றது?, வைகோவினை நம்பியெல்லாம் காத்திருந்திருக்கின்றார்கள்
வைகோவினையும், பழநெடுமாறனையும் நம்பி அழிந்திருக்கின்றார் பிரபாகரன் , ஆனால் இவர்கள் திட்டுவது எல்லாம் கலைஞரை
அந்த தடை நீக்கும் வழக்கில் வைகோ வாதாடி ஒன்றும் கிழிக்கவில்லை என்பது இன்னொரு விஷயம்..
(இந்த பேட்டியில் மட்டுமல்ல எந்த பேட்டியிலும் சீமான் என்றொரு பெயரையோ, திருமுருகன், வேல்முருகன் என்றொரு பெயரையோ சொன்னதே இல்லை
இப்படி சிலர் உண்டு என்பதே அவருக்கு தெரியாது, இன்று அவர்கள் எல்லாம் கத்திகொண்டிருப்பதுதான் வினோதம்)

No comments: