Thursday, May 25, 2017

திரிகோணமலையில் அமெரிக்க முகாம்

திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி
1980ல் அமெரிக்கா இதற்குத்தான் முயன்றது, தந்திரமாக ஆடிய இந்திரா அதனை முறியடித்தார், அதன் பின் புலிகள் இந்திய எதிரிகள் என்றாலும் இந்தியா விட்டுகொண்டே இருந்த காரணம் அதுதான், சிங்ளனை மிரட்ட ஒரு சக்தி தேவை
இது பிரபாகரனுக்கு மிக நன்றாக தெரியும், அந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை ஒரு பொருட்டாக எடுக்காமல் இருந்தார் பிரபாகரன்
2009ல் விஷயம் எல்லை மீறியது, புலிகளை ஒழித்து தீருவோம் என உலகம் மொத்தமாய் களமிரங்கியபொழுது இந்தியாவால் தடுக்கமுடியவில்லை, முடியவும் முடியாது
அதனால் மறுபடியும் 1987 ஒப்பந்தத்தை காட்டி உட்புகுந்துவிடலாமா என யோசித்தது, ஆனால் புலிகள் விடவில்லை
இந்திய ராணுவத்தை அனுப்பும் முடிவினை இந்திய தளபதிகளே நிராகரித்தனர், சென்று காப்பாற்றினால் அமைதிபடை பட்டபாடுதான், புலிகள் ஆயுதம் ஒப்படைத்து சரணடையட்டும் மறுநொடி நாம் இறங்கலாம்
புலிகள் ஒப்புகொள்ளவே இல்லை, எல்லாம் முடிந்தது
இப்பொழுதும் திரிகோணமலை துறைமுகத்தில் இந்திய பிடி உண்டு, அது யுத்த முகமாக மாற்றபடாது என்ற இலங்கை சட்டமிருப்பதால் அது எண்ணெய் குடோனாக உள்ளது
அமெரிக்காவிற்காக அது யுத்தமுகாம் என திருத்தபடுமானால் நிச்சயம் இந்தியாவால் சும்மா இருக்கமுடியாது, இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கின்றதோ தெரியவில்லை
ராஜிவினை இழ்ந்தும் திரிகோணமலையில் காங்கிரஸ் அரசு தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தது, ஆனால் பாஜக அரசு சறுக்குகின்றது
இனி அமெரிக்க படைகள் இலங்கையில் கால்பதிக்கலாம், நாளை அமெரிக்கா இந்தியா மோதும் சூழல் வந்தால், அதாவது இந்தியா பாகிஸ்தான் மோதலிலோ அல்லது இன்னொரு நாட்டுடன் இந்தியா மோதும் சூழல் வந்தாலோ நாங்களும் இறங்குகின்றோம் என இறங்கினால்
சாகபோவது தமிழகம் தான், இப்போதைக்கு சீனாவினை விரட்டுகின்றோம் என அமெரிக்காவுடன் இந்தியா கரம்கோர்த்தாலும் அவர்கள் நம்பகூடியவர்கள் அல்ல‌
இனி நெல்லைமாவட்ட விஜயநாராயணத்தை மேம்படுத்தும் அவசியம் இந்தியாவிற்கு வரலாம், சேது சமுத்திர திட்டத்தை மீளாய்வு செய்யும் நிலைவராலாம்
அமெரிக்கா கால்பதித்துவிட்டால் இனிவரும் காலங்கள் பரபரப்பானவை, அது கால்பதிக்கும் அறிகுறி தெரிகின்றது
அதெல்லாம் இருக்கட்டும்
இந்திய படை ஆக்கிரமிப்பு படை, கற்பழிப்பதற்கு என்றே ஜட்டியோடு ஈழம் சென்றபடை என சொன்னவன் முகத்தை எல்லாம் தேடிகொண்டிருக்கின்றேன்
இதோ அமெரிக்க முகாம் இலங்கையில் வருகின்றதே? அது என்ன ராவணன் கோயிலை தேடிய திருபயணமா? புனித யாத்திரையா?
இலங்கையில் கால்பதித்த இந்தியாவினை புலிகளை வைத்து விரட்டியதும் , பின் புலிகளை அழித்துவிட்டு ஒன்றும் தெரியா கன்னிபோல கால் வைப்பதும் யார் விளையாட்டு என தெரிகின்றதா?? முள்ளிவாய்க்கால் கொடுமை ஏன் நடந்தது என புரிகின்றதா?
புரிந்தாலும் சொல்லமாட்டீர்கள்
அந்த அரைகிறுக்கனும், உலகத்தை தன் அடிதொண்டையில் வைத்திருப்பவனுமான சீமான் என்பவன், திருமுருகன் காந்தி, திருமா, வேல்முருகன் சொல்வதை நம்பியதாக நடியுங்கள்
உண்மைகள் சாகாது, பொய்கள் நிலைக்காது
ராஜிவின் தியாகமும், புலிகளின் சாயமும் வெளியே வந்துகொண்டிருக்கின்றது
அது இருக்கடும், இந்தியாவிலிருந்து வெறும் 50கிமீ தூரத்தில் உலக வல்லரசு முகாம் அமைக்கின்றது, மோடி என்ன செய்ய போகின்றார்? மோடி செய்யமாட்டார்
ஆனால் புட்டீன் செய்யலாம், ஐ.என்.எஸ் கட்டபொம்மன் இனி விஸ்வரூபமெடுக்கலாம்
காங்கிரசின் அயல்நாட்டு திட்டங்கள் எப்படி எல்லாம் இருந்திருக்கின்றன, புலிகள் எனும் அந்நிய சக்தி எப்படி சிதைத்திருக்கின்றது என்பதை கண்ணார காண்பீர்கள், இதோ கண்டுகொண்டிருக்கின்றீர்கள்
அரேபியருக்கு பெட்ரோல் போல ஈழமக்களுக்கு அந்த துறைமுகம் துருப்பு சீட்டு, அதனை வைத்து சிங்களிடம் பல உரிமைகளை வல்லரசு துணையோடு பெற்று அமைதியாக வாழும் வாய்ப்பு இருந்தது, அது ஒன்றுதான் தீர்வு , சுயநல உலக யதார்த்தம் அது
அப்படி இந்தியா சில உரிமைகளை பெற்றுகொடுக்க முயன்றது, அடிபட்டு ஒதுங்கியது, இதோ அமெரிக்கா நுழைகின்றது? என்ன உரிமை ஈழ தமிழருக்கு பெற்று கொடுத்தது? போர்குற்றம் கூட குப்பைக்கு சென்றாயிற்று
புலிகள் ஒருகாலமும் சிங்களனை வெல்லமுடியாது, வென்றாலும் அது தனிநாடு ஆகமுடியாது, ஏதாவது ஒருநாடு வந்து மீட்டு சிங்களனிடம் கொடுத்தே தீரும்
இந்நிலையில்தான் இந்தியா ஓரளவு ஈழதமிழருக்கு நலம் கொடுக்கும் திட்டங்களை சொன்னது, கேட்கவேயில்ல்லை, தனிநாடு கிழிப்போம் என்றார்கள், எங்கே அமெரிக்க படைகளை விரடட்டும் பார்க்கலாம்..
இனியும் எவனாவது அமைதிபடை ஏன் சென்றது என கேட்கமுடியுமா? முடிந்தால் அமெரிக்க தூதரகத்தில் சென்று ஈழ் திரிகோணமலையில் அந்நிய வெள்ளையனே உனக்கு என்ன வேலை என கேட்டுவிட்டு வாருங்கள்.

No comments: