Tuesday, September 24, 2019

சத்திய வரலாறு

சத்திய வரலாறு - 1 - தமிழ்நாடு என பெயர் வைக்க கோரி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்கிறார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிட திரு.வி.க, பேரறிஞர் அண்ணா போன்ற பலர் முயற்சித்தும் பலனற்று போனது.  அது 1957_ம் ஆண்டு, அப்போது ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர் காமராசர். சங்கரலிங்கனார் இந்த கோரிக்கைக்காக இறந்த பிறகும் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் காமராசரே முதலமைச்சர்.
ஆயினும் “தமிழ்நாடு” என்கிற பெயர் மாற்றத்தை நினைத்து கூட பார்க்கவில்லை காமராசர்!!!!
1957_ல் சங்கரலிங்கனார் இறந்து போகிறார்.
1967_ல் பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வருகிறார்.
முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாக தாய் தமிழ்மண்ணிற்க்கு, “தமிழ்நாடு” என்கிற பெயரை சூட்டுகிறார்!!!

சத்திய வரலாறு - 2 - தமிழகத்தின் எல்லையில் தேவிக்குளம், பீர்மேடு எல்லை பிரசினை பூதாகார உருவெடுக்கிறது. அப்போதும் ஆட்சியில் இருந்தவர் காமராசர் தான்!!! தமிழகமே கொத்தளித்து நிற்கிறது!!! “மேடாவது, குளமாவது” என தமிழக எல்லையை பற்றி அசட்டையாக பதிலளித்தவரும் இதே காமராசர் தான்!!!

சத்திய வரலாறு - 3 - பெரியாரும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள்.  ஆயினும் காமராசர் எனும் பச்சை தமிழனை வீழ்த்த உதவமாட்டேன் என சொன்னதோடு காமராசரை ஆதரித்தார் பெரியார். பேரறிஞர் அண்ணாவோ, காமராசரை எதிர்த்து வேட்பாளரே நிறுத்த மறுத்தார். ஆனால், பச்சை தமிழனான காமராசரை எதிர்ப்பதே வாழ்நாள் இலக்காக கொண்ட மா.பொ.சி. காமராசருக்கு எதிரான ராஜாஜியின் கை கோர்த்து கொண்டு துரோகம் செய்தார்!!!

இப்படி வரலாற்று உண்மைகள் நிறைய இருக்கின்றன!!!

ஆனால்.., தமிழ்நாடு என பெயர் வைக்க மறுத்தவரும், எல்லையை காவு கொடுத்தவருமான காமராசர் மண் இதுவாம் - சீமானின் தம்பிகளுக்கு.
காமராசரை இப்படி சொல்கிற இவர்களே, காமராசருக்கு நேர் துரோகியான ம.பொ.சி.யையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள்!!!

எனில், சீமான் இவர்களுக்கு கற்று தந்திருப்பது புழுகினி வரலாறு தானே!!!

No comments: