Tuesday, September 24, 2019

தமிழ் தேசியவாதி என்று யாரும் ஏற்கப்போவதில்லை

சீமான் அரசியல் கட்சி நடத்துகிறார் என்று அவர்கள் சொல்லுவதில்லையே. அப்படி சொல்லிட்டு போனால் யார் கேட்க போகிறார்கள் ? தமிழ் தேசியம் என்பது என்னை விட்டால் யாரும் இல்லை என்பதும்.  அதற்கு ரசிக குஞ்சுகளின் அலப்பரையும், யாரையும் மதிக்காமல் மக்களையே குறை சொல்லுவதும், திராவிட கட்சிக்கு போட்டியாக அனைத்து சித்தாந்தத்தையும் தமிழர்களுக்கு எதிராக பின்பற்றும் ஒரு நபரை தமிழ் தேசியவாதி என்று யாரும் ஏற்கப்போவதில்லை

சீமானின் செயல்பாடுகள் திராவிட மற்றும் ஹிந்துத்வ அரசியலுக்கு எந்தவகையிலும் மாற்று இல்லை. தனது கேரக்டரை தானே கொல்ல முடிவெடுத்து செயல்படும் பொழுது யாரும் காப்பாற்ற முடியாது. லைக்கா வுக்கு ஆதரவு, கமலஹாசன், எளிய மகன் பன்னீர், குறைந்த சான்றோன் மாபா ..... இறுதியா ஜக்கிக்கு ஆதரவு .....இதெல்லாம் என்ன தமிழ் தேசிய அரசியல் அணுகுமுறையா  ?      

இத்தனை நாள் இவர்களின் அனைத்து தவறான முடிவுகளுக்கும், சமரசத்திற்கு நாம் முட்டு கொடுத்து கொண்டு நின்றோம். எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. இன்று ரவுடி பயலுக சகவாசத்தில் வந்து நிற்கிறது. தற்குறிகள் எல்லாம் அட்வைஸ் பண்ணினது போதாதுன்னு இனிமேல் ரவுடிகள் எல்லாம் வரணுமா ? ஒரு இனத்தையே இனப்படுகொலைக்கு கொடுத்துவிட்டி இன்று ஒரு தவறான நபரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு தமிழ் தேசியவாதிகள் முட்டாள் இல்லை.

No comments: