Tuesday, September 24, 2019

சங்க இலக்கியங்களில் சாதிகள் இல்லை

சங்க இலக்கியங்களில் சாதிகள் இல்லை, ஐம்பெருங்காப்பியங்களில் சாதிகள் இல்லை பின் எப்போது சாதிகள் தமிழருக்கு அறிமுகமானது என அறிய சாதிகளின் தோற்றுவாய் தமிழில் எப்போது நிகழ்ந்தது எனத் தேடினேன்

மநு தர்மம் என்ற பெயரில் வந்தேறிகள் எழுதிய குப்பை எப்படி தமிழர் மீது ஏற்றபட்டது என வினவினேன்

விடை விளக்கமாக கண்டறிந்தேன், ஆளுக்கொரு சாதியாகப் பகுத்து அத்தனை பேரையும் இல்லாத கடவுள் உலகம் செல்ல பயணச்சீட்டு கொடுக்க பார்ப்பனன் அந்தணராகவும் மற்றவர்கள் மநு தர்ம பகுப்புகளாகவும் திறம்பட எழுதி அனைவரும் பார்ப்பனனுக்கு அடிமை என கதை கதையாக வாழைப்பழத்தில் ஊசி குத்துவதுபோன்று ஏற்றிய திட்டமே பெரியபுராணமும் அதன் 63 நாயன்மார்களும்

சற்றே ஆய்ந்ததில்

இழிவான மனுசாத்திர குப்பையை முதன் முதலில் தமிழர் எண்ணத்தில் சாதிகளாகப் பகுத்து பிரிவினையை உட்புகுத்த இந்த 63 நாயன்மார் இழவுகளை கீழ்கண்டவாறு பரப்புரைத்தனர்

மனு - பிராமணர்:
அந்தணர் (13)

மனு - சத்திரியன்:
அரசன் (12)

மனு - வைசியன்:
வணிகர்(5)

மனு - சூத்திரன்:
வேளாளர் (14)
ஆதி சைவர்(4)
மரபுக்கொருவர்(13)

மனு - சண்டாளன்:
மரபு கூறப்படாதவர் (2)

என வகைப்படுத்தி அவரவர் சாதிகளுக்கென பார்பனன் கால்நக்கி வாழும் கதைகளை எழுதினர். இதுவே 63 நாயன்மார் பெரியபுராணம் பெரிய சாதிச்சண்டைகளுக்கு வித்தானது

இத்தக்கதைகளை படித்தால் மனைவியை பார்ப்பனனுக்கு கூட்டிக்கொடுத்தல்

பெற்றப்பிள்ளையைக் கொன்று பார்ப்பனனுக்கு உணவாகப் படைத்தல்

பிரம்படிபட்டாலும் பார்பனனுக்கு அடிமையாய் அடிபணிதல்

கடவுளேயானாலும் கீழ்சாதியானால் நடைசாத்தப்பட்ட கோவிலுக்கு மட்டுமே அனுமதித்தல் அதாவது தீண்டப்படாதவனாக ஏற்றுக்கொளல்

என கீழ்த்தரமாக சாதிகள் உட்புகுத்தப்பட்டிருக்கும்

No comments: