Thursday, June 13, 2019

வாழ்க மனுநீதி சோழன்

வாழ்க மனுநீதி சோழன்

ஆதித்த கரிகால சோழனை கொலை செய்தனர் சில ஆரிய பார்ப்பனர்கள். மனுசாஸ்த்திர படி பார்ப்பனர்களை  தண்டித்தால் பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் என்பதாலும் மனுசாஸ்த்திரத்தில் பிராமணர்களுக்கு தண்டனையே இல்லையென்பதாலும் மனுசாஸ்த்திரபடி ஆட்சி செய்த ராஜராஜன் கொலைகார பிராமணர்களை தண்டிக்காமல் நாடு கடத்தியவன் ராஜ ராஜ சோழன். என்ன ஒரு நீதி!!! மனுநீதி!!! அதனால் தான் அவர் மனுநீதி சோழன் என்று ஆரியர்களால் புகழப்பட்டார்.

பெரிய கோயிலில் முடி திருத்துபவர்களுக்கு, `ராஜராஜ பெரு நாவிதன்’,  அரச அறிவிப்புகளை பறையறைந்து சொல்பவர்க்கு "ராஜராஜ பெரும் பறையன்" பட்டம் கொடுத்து கவுரவிச்சிருக்கான்யா ராஜராஜன்..
வாவ்.. என்னே சமூக நீதி...

பட்டத்த மட்டும் பாட்டாளிக்கு கொடுத்திட்டு நிலத்தையெல்லாம் பார்ப்பானுக்கு கொடுத்திருக்கான்யா..

என்னடா செஞ்சான் சோழன்னு கேட்டா, கோயில கட்டுனான் குளத்த வெட்டுனான்னு பெருமையா சொல்றானுங்க.

நாலு கல்விக்கூடம் கட்டி நாலு பேர படிக்க  வைக்க துப்பு இல்ல. கோயில் கட்டுனது குளம் வெட்டுனதெல்லாம் ஒரு சாதனைனு தூக்கிட்டு வரானுங்க.

கட்டுன கோயிலுகுள்ளயும் தமிழர்கள் எல்லாருக்கும் அனுமதி இல்லை,

வெட்டுன குளத்துக்குள்ளயும் நம்ம எல்லாருக்கும் அனுமதி இல்லை.

அப்புறம் என்ன கூந்தலுக்கு கட்டுனானுங்க வெட்டுனானுங்கனு கேட்டா, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைனு சொல்றானுங்க தன்மானமில்லாத முட்டாள்கள்.

வேத,சமஸ்கிருத பாடசாலைகளை அமைத்த ராஜராஜ சோழன் தமிழருக்கும் தமிழுக்கும் ஒரேயொரு பள்ளிக்கூடம்  கூட அமைக்கவில்லையே இவன் எப்படிடா தமிழரின் பெருமை மிகு அடையாளமாக இருக்க முடியும்.

"பார்ப்பானிடம் மண்டி போட்டா"
அது பொற்காலம் ! ராஜராஜன் காலம் பொற்காலம்

அதுவே "பார்ப்பான் மண்டி போட்டா"
அது இருண்டகாலம் !! களப்பிரர்கள் காலம் ஆரியத்தின் ஆதிக்கத்தை ஒழித்த காலம் அதனால் அது இருண்ட காலம்.

இது தான் இந்த மண்ணின் உண்மை வரலாறு !!

எச்ச ராஜா Rss காவிக்கூட்டம் ராஜராஜனுக்காக பொங்கும் போதே தெரியவேண்டாமா ராஜராஜ சோழன் ஆட்சியில் யார் பயன்பட்டார்கள் அந்த ஆட்சி யாருக்கு பொற்காலம்னு

  மனுநீதி பிறழாமல் ஆட்சி செய்து ஆரியரிடம் மனுநீதி சோழன் என்று பட்டம் வாங்கிய ராஜராஜன் தமிழ்,தமிழர்  விரோதியே

No comments: