Friday, May 19, 2017

புலிகளால் கொல்லபட்ட தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்காக அழுகின்றார்களாம், புலிகளுக்காக அழுகின்றார்களாம் அழுங்கள்
நாங்களும் ஏராளமான தமிழருக்காக அழுகின்றோம்
ஆல்பர்ட் துரையப்பா எனும் யாழ்பாண முன்னாள் மேயருக்காக, செல்லகிளி எனும் புலியின் மர்ம மரணத்திற்காக, மைக்கேல், பற்குணம் போன்ற ஆரம்பகால தமிழர்களுக்காக‌
கொஞ்சம் பொறுத்திருந்தால் சிறை தப்பியிருக்கும் குட்டிமணி கோஷ்டிக்கு வாய்பளிக்காமல் அவசரமாக புலிகளால் நடந்த கண்ணிவெடி தாக்குதலும், அதனை தொடர்ந்த கொழும்பு கலவரத்தில் செத்தவர்களுக்காக அதனை தொடர்ந்து வெலிக்கட சிறையில் கொல்லபட்ட குட்டிமணி கோஷ்டிக்காக..
புலிகளால் கொல்லபட்ட பஸ்தியான் பிள்ளை போன்ற இலங்கை தமிழ் காவல் அதிகாரிகளுக்காக..
புலிகளின் வங்கி, அடகுகடை முயற்சியில் கொல்லபட்ட தமிழர்களுக்காக‌
வெடிகுண்டு சோதனைகளில் புலிகளால் கொல்லபட்ட தமிழருக்காக‌
புலிகளால் கொல்லபட்ட ராஜினி முதல் ஏராளமான சிந்தனைவாதி தமிழர்களுக்காக..
புலிகளின் கந்தன் கருணை இல்லத்தில் கொல்லபட்ட 80 தமிழ் போராளிகளுக்காக‌
புலிகளால் கொல்லபட்ட சபாரத்தினம் அவரின் படையில் இருந்த ஆயிரம் தமிழருக்காக, ஆமாம் ஆயிரம் தமிழர்கள் அன்று புலிகளாலே கொல்லபட்டனர்
புலிகளால் கொல்லபட்ட மாற்று இயக்க தமிழர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும் அந்த தமிழருக்காக‌
புலிகளால் கொல்லபட்ட மெண்டிஸ் போன்ற போராளிகளுக்காக....
துணுக்காய் போன்ற புலிகளின் வதைமுகாமில் சித்திரவதை செய்து கொல்லபட்ட ஏராளமான தமிழருக்காக..
ஈழ தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் என்ன உறவு? மொழி உறவாம். ஆனால் இலங்கை இஸ்லாமிய தமிழருக்கும் ஈழதமிழருக்கும் மொழி ஒன்றாயினும் உறவே இல்லையாம், அந்த புலிகளால் மசூதியில் கொல்லபட்ட 200 இஸ்லாமிய தமிழருக்காக‌
புலிகளால் சென்னையில் கொல்லபட்ட பத்மநாபாவிற்காக, அவரோடு செத்த 14 தமிழருக்காக, அப்பொழுது சிவராசனால் கொல்லபட்ட ஒரு தமிழக காவலுனுக்காக‌
கொழும்பில் கொல்லபட்ட அமிர்தலிங்கம் எனும் தமிழ் தலைவனுக்காக. இன்னும் 2005 வரை கொல்லபட்ட லஷ்மன் கதிர்காகர் போன்ற தமிழருக்காக‌
ராஜிவ்காந்தியுடன் சென்னையில் கொல்லபட்ட 16 தமிழருக்காக‌
வஞ்சகமாக பேரரிவாளனையும், நளினியினையும் சிக்க வைத்துவிட்டு இறுதிவரை வாய்திறக்காத புலிகளின் வஞ்சகத்திற்காக, கிட்டதட்ட இதுவும் கொலையே
புலிகள் இயக்கத்தில் இருந்த மாத்தையா என்பவரை 500 தமிழர்களுடன் சுட்டு கொன்றார்கள் அல்லவா? அந்த கொலைகளுக்காக‌
கருணா பிரிவு போராளிகள் 400 பேரை வெருகல்லில் கொன்ற கொலைக்காக‌
பள்ளி தமிழ் சிறுவர் சிறுமியரை பிடித்து அவர்களை போர்முனைக்கு அனுப்பி கொன்றார்கள் அல்லவா? அந்த அழிவிற்காக‌
3 தமிழ் தலைமுறை கல்வி, வாழ்வு என சகலமும் புலிகளால் அழிந்திருக்கின்றதல்லவா அதற்காக ....
2009ல் மக்களை விடுங்கள் என உலக நாடுகள் கேட்டும் சுட்டிம் அடித்தும் தங்களோடு வைத்திருந்தார்கள் அல்லவா? அந்த கொடூரத்திற்காக‌
அந்த தமிழர்களை எல்லாம் நினைத்து அழுகின்றோம்
பிரபாகரனுக்கு தன் குண்டுதுளைக்காத பிரத்யோக சட்டையினையும், கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பிய ராஜிவ் காந்தி
முதலில் பிரபாகரனை நம்பி, பின் இவர் மக்கள் போராளியே அல்ல என முதலில் சொன்ன ராஜிவ்காந்தி சொன்னதும், பின்னாளில் பிரபாகரனுடன் பேசிவிட்டு அலறி அடித்து ஓடிய
நார்வே தூதர் எரிக் சோல்ஹிம் சொன்னதும் தான் மகா உண்மை
"பிரபாகரன் தன் உயிருக்கு அஞ்சுகின்றார், துப்பாக்கியினை கீழே வைத்தால் மறுநிமிடம் கொல்லபடுவோம் என சந்தேகிக்கின்றார்
அந்த பயம் இருக்கும் வரை அவர் எதனைபற்றியும், யாரைபற்றியும் கவலைபட மாட்டார், அவர் இருக்கும் வரை அழிவுகள் தொடர்ந்தே இருக்கும்"
இறுதியாக அதுதான் பலித்தது, அந்த அழிவு பல்லாயிர கணக்கான மக்களோடு நிகழ்ந்ததுதான் சோகம்
கொழும்பிலும், வடமராச்சியிலும் களம்புகுந்து தன் கையினை சுட்டுகொண்ட இந்தியா அதன் பின் ஒதுங்கியது, அதாவது ஆரம்பத்திலே இந்திய தலையீடு இல்லையென்றால் 1980களிலே முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை, 2009 வரை நீடித்திருக்காது
2009 வரை பிரபாகரன் வாழ ஒரே காரணம் இந்தியா, ராமன் ராவணனுக்கு கொடுத்தது போல, கண்ணன் துரியோதனனுக்கு கொடுத்தது போல பல வாய்ப்புகளை இந்தியா கொடுத்தும் புலிகள் ஏற்கவே இல்லை
சிங்கள தளபதி சொன்னது போல "இந்திரா, ராஜிவ் தலையீடு மட்டும் இல்லையென்றால் 1980களிலே எமது நாடு அமைதியாயிருக்கும், 2009 வரை இழுத்த காரணமே இந்தியாதான்"
எல்லாம் முடிந்துவிட்டது
பலர் புலிகள், முள்ளிவாய்க்கால் என அழுது இந்தியாவிற்கும், கலைஞருக்கும், காங்கிரசுக்கும் சாபமிடட்டும்
காரணமில்லா சாபம் பலிப்பதில்லை
இப்படியாக தமிழர்களை கொன்று, தமிழ் போராளிகளை கொன்று, தமிழ் தலைவர்களை கொன்று, சிங்களன் கொலை முயற்சியில் தப்பிய ராஜிவ்காந்தியினை கொன்ற புலிகள், உண்மையில் யாருக்கு உபயோகமான காரியம் செய்திருக்கின்றார்கள்?
சாட்சாத் சிங்களனுக்கு,, இந்த காரியங்களால் அவனுக்குத்தான் பெருத்த இலாபம். இதனால்தான் அவனால் வெல்ல முடிந்தது
ஆக புலிகள் போராடிய பலன் இதுதான், சிங்களனுக்கு சார்பாகத்தான் அனைத்து கொலைகளையும் நிகழ்த்தியிருக்கின்றார்கள்
புலிகள் காரணமின்றி ஒருவித மூர்க்கத்தில் நிகழ்த்திய இக்கொலைகள்தான், சிங்களனுக்கு வெற்றியினை கொடுத்தன, தமிழருக்கு முள்ளிவாய்க்காலை காட்டின‌
உறுதியாக சொல்லலாம், 1970 முதல் 2000 வரை ஈழத்தில் எழும்பிய மிக உணர்ச்சியான கொதிநிலையிலான மக்கள் எழுச்சியினை அடக்கி, சிங்களனிற்கு உதவியாக இருந்தை அன்றி புலிகள் ஒன்றும் செய்துவிடவில்லை
ஆழநோக்கினால் அதுதான் புரியும்
தமிழ்போராட்டம் தமிழர்களை கொன்ற விசித்திரத்தையும், அதனை தடுக்க முடியாத நம் நிலையினையும் நினைத்து நினைத்து அழலாம்...
நாம் மேற்கண்ட தமிழருக்காக அழலாம், புலிகளால் கொல்லபட்ட சிறுபகுதி தமிழர்கள் நிலைதான் சொல்லபட்டிருக்கின்றது, இன்னும் ஆயிரகணக்கான பட்டியல் உண்டு
அது முள்ளிவாய்க்கால் பட்டியலை விட கொடூரமானது..

No comments: