Friday, May 19, 2017

பிரபாகரன் & கலவரம் & அமைதி

ஈழதமிழர் விவகாரத்தில் பலர் அள்ளிவிட்டனர், கடைசியில் வந்து கப்சா விட்டவர் ஜெகத் கஸ்பர் எனும் பாதிரி, சும்மா சொல்ல கூடாது , அவர்தான் சீமானுக்கு முன்னோடி
புலிகள் பற்றி அவர் அள்ளிவிட்ட கதைகள் ஏராளம்
அதாவது இவர் பிரபாகரனை பார்த்து நாள்கணக்காக பேசி ஒரே இலையில் உண்டு மகிழ்ந்தாராம்
ஒருநாள் பிரபாகரன் சொன்னாராம், "பாதர், 1983க்கு பின்னால இன்னைக்கு வரைக்கும் கொழும்பில, மற்ற இடத்தில‌
சிங்களன் தமிழரை அடிக்கையில்லை, ஏன் என்டால் புலியள் திருப்பி அடிக்கும்ங்க்ற பயம்
அந்த பயபயத்துலதான் பாதர், இந்த நாட்டிலே தமிழன் வாழமுடியுது, புலியள் இல்லண்ணா ஒரு நொடி கூட தமிழன விடமாட்டான்"
உடனே கஸ்பார், "பிதா சுதன் பரிசுத்தஆவி பெயராலே ஆமென், ஸோஸ்த்திரம் கர்த்தாவே ஸ்ஸோஸ்திரம் புலியள் இல்லாட்டி தமிழினம் அழிஞ்சி போயிரும் கர்த்தாவே" என நெற்றியில் சிலுவை போட்டாராம்
இன்றோடு புலிகள் அழிந்து 8 வருடம் ஆகின்றது, எங்காவது ஒரு கலவரம் இலங்கையில் நடந்திருக்கின்றதா?
ஒரு ஈழதமிழன் வலியோடு சொன்னது நிஜம்
"பிரபாகரன் பிறந்தான், அமைதியான நாட்டில் குண்டுகள் வெடிக்க தொடங்கின, அவன் இறந்ததும் மறுபடி நாடு அமைதியாயிற்று"
ஆக புலிகள் இல்லையென்றால் இலங்கை தமிழர் எல்லாம் அழிந்துவிடுவர் என்பதெல்லாம் தமிழக பொறுப்பற்றதரப்பினர் கட்டிவிட்ட கதைககளில் ஒன்று
சீமான், வைகோ, வேல்முருகன், திருமுருகன், திருமாவளவன் இந்த பாத(க)ர் எல்லாம் ஒரே வரிசை..

No comments: