Friday, May 19, 2017

புலிகள் 1

நிச்சயமாக முள்ளிவாய்க்கால் கொடூரம்தான், மறுக்க முடியாது
ஆனால் பாலஸ்தீனமும், இன்றைய சிரியாவும், இன்னும் ஏராளமான நாடுகள் அனுதினமும் சந்திக்கும் நிலை அதுதான், அப்படித்தான் உலகம்
வலுவான பின்புலம் இல்லா போராட்டம் இப்படித்தான் நொறுக்கபடும்
இதனை 1980லே சொன்னது இந்தியா, அதனால்தான் அன்றே முள்ளிவாய்க்காலான வடமராச்சியினை இந்தியா களமிறங்கி காத்தது
புலிகள் பெருவீரர்கள் என்றால் இந்தியா களமிறங்க அவசியமே வந்திருக்காது, புலிகளால் காக்க முடியாத தமிழரை காக்கத்தான் அன்று ராஜிவ் களமிறங்கினார்
இன்னொரு அழிவு வந்துவிட கூடாது என்றுதான் இந்திய படை அனுப்பவும் பட்டது
ஆனால் நடந்தது என்ன?
புலிகளும் சிங்களனும் கூட்டாளியாயினர், பிரேமதாசாவும் புலிகளும் சேர்ந்து இந்திய படையினை விரட்டினர்
எப்படிபட்ட அவமானம் இது? யாருக்காக களமிறங்கினோம்? தமிழருக்காக‌
யாரை எதிர்த்து இறங்க்கினோம் சிங்களனை..
ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாகி நம்மை அடிப்பார்களாம்,
இந்தியா தனிநாட்டை தடுக்கின்றது என சீறிய புலிகள், சிங்களனிடம் அடைக்கலாமனது ஏன்?? அவன் மட்டும் கொடுத்துவிடுவானா?
உதவ வந்தவனை அடித்துவிட்டு பகைவனோடு கை கோர்ப்பதை அறிவுள்ளவன் செய்வானா? ஆனால் புலிகள் செய்தனர்
ஆனால் அதனையும் மீறி, அந்த அவமானங்களையும் தாண்டி இந்தியா தமிழ் மாகாணசபை வரை நிறைவேற்றியது, ஆனால் பொய்பிரச்சாரங்களிலும் , புலிகள் செய்த பல தந்திரங்களாலும் அவமானமாக திரும்பியது
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வரும்பொழுதெல்லாம், அதில் தமிழரை இந்தியா காக்கவில்லை என பலர் கதறும்பொழுதெல்லாம், இந்தியா அன்று உதவபோய் சம்பாதித்த அவமானங்கள் எல்லாம் நினைவுக்கு வரும்
இவர்களை காக்க சென்று புலிகளால் தூண்டபட்ட மோதலில் உயிர்விட்ட 1500 இந்திய வீரர்களின் நினைவு வரும், அவர்களில் பலரை அம்மணமாக்கி கொன்ற புலிகளின் கொடூரம் நினைவுக்கு வரும்
குறிப்பாக அந்த வார்த்தை, புலிகளின் வார்த்தை, சிங்கள பிரேமதாசாவும், புலிகளும் சேர்ந்து சொன்ன வார்த்தைகள்..
"சிங்களனும் தமிழனும் அண்ணன் தம்பிகள், இன்று அடித்துகொள்வோம் நாளை சேர்ந்துகொள்வோம்
இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை???"
ஆம், இப்படி விரட்டியபின் எங்களுக்கு அங்கு என்ன வேலை?
பின் கலைஞருக்கும், சொனியாவிற்கும் எதற்கு ஈழவிவகாரம்?

No comments: