Tuesday, May 29, 2018

கச்சநத்தம் வன்கொலைகள்

ஜல்லிக்கட்டு போராட்டதின்போது, “மாடு பிடிப்பதில் சாதியம் இருக்கிறது” என பேசிய ஒருசிலரை தமிழர் ஒற்றுமையைக் குலைக்கிறார்கள் என குற்றம் சொன்னீர்கள். இதை பேச இதுவல்ல நேரம் என்றீர்கள்.
நீட் தேர்வு குளறுபடிகளால் அனிதா இறந்தபோதும், அவளை தலித் என்று அடையாளப்படுத்துக்கூடாது, இதை பேச இதுவல்ல இடம் என்றீர்கள்.
பிறகொரு நாள், பிறகொரு இடத்தில் இதை பேசலாம் வா என்றால், அதை தலித்துகள் மாநாடு என்று அடையாளப்படுத்தி ஒதுங்கிக்கொள்கிறீர்கள்.
ஆனால் உங்கள் “தமிழண்டா” அடையாளத்திற்குள் தலித்துகள் இல்லை என்பதை மட்டும் அவ்வப்போது கச்சிதமாக எமக்கு புரிய வைத்து விடுகிறீர்கள்.
”கச்சநத்தம் வன்கொலைகள்”.

No comments: