Tuesday, May 29, 2018

பார்ப்பன சொம்பு

பார்ப்பன சொம்பு
கோவையில் பரவலாக இருக்கும் மலையாளம் பேசும் நாயருக்கும் தமிழ் ஜாதி என்று சொல்லப்படும் கவுண்டர்களுக்கும் ஜாதி ரீதியிலான பிரச்சினை வந்திருக்கிறதா
வன்னியர்களுக்கும் தெலுங்கு பேசும் நாயக்கர்களுக்கும் ஜாதி சண்டை வந்திருக்கிறதா
ஹிந்தி பேசும் மார்வாடிகளுக்கும் முக்குலத்தோருக்கும் மோதல் வந்திருக்கிறதா
ஆனால் கவுண்டர் வன்னியர் முக்குலத்தோர் என்று அனைவரும் ஒரே மாதிரி தலித் சமூகத்திற்கு எதிராக செய்த வன்முறைகள் ஏராளம்
இது தான் சமூக உளவியல்
இதில் தமிழ் ஜாதி மலையாள ஜாதி தெலுங்கு ஜாதி ஹிந்தி ஜாதி என்று எதுவும் இல்லை மொத்தத்தில் கீழ் ஜாதி மேல் ஜாதி என்பது மட்டுமே சமூக உளவியல்
சீமான் அக்கிளத் தூக்கிட்டு கத்தறதுக்கும் நடைமுறை சமூக உளவியலுக்கும் கூந்தல் அளவிற்கு கூட சம்பந்தம் இல்லை
பட்டியல் பிரிவில் தங்களை சேர்த்தது தான் தன் சமூகம் ஜாதி படிநிலைகளில் கீழாக உணரப்படுவதற்கு காரணம் என்று நாசா விஞ்ஞானி கிச்சா கண்டுபிடித்திருக்கிறார்
ஒரு வாதத்திற்காக சொல்கிறேன் பார்ப்பனர்களை SC பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு கொடுத்து விட்டால் பார்ப்பனர்கள் தங்களை அவமதித்து விட்டதாக இட ஒதுக்கீட்டை எதிர்ப்பார்களா
கண்டிப்பாக மாட்டார்கள் மாறாக முழுமையாக ஆதரித்து இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிப்பார்கள் காரணம் SC பட்டியலில் சேர்வதால் அவர்களது சமூக உயர் ஜாதி உளவியல் துளியளவிற்குக் கூட குறையாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்
சரி சில மாதங்களுக்கு முன்பு கிச்சா ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அதில் பார்ப்பனர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தன் சமூகம் முன் வரிசையில் நிற்கும் என்றார்
இப்போது கிச்சா சமூகம் பாதிக்கப்பட்ட சமயத்தில் பார்ப்பனர்களை சிவகங்கையில் கூட்டம் போட வைத்து கிச்சா சமூகத்திற்கு பிரச்சினை என்றால் பார்ப்பனர்கள் முன் வரிசையில் நிற்பார்கள் என்று சொல்ல வைக்க முடியுமா
இப்படி பேசுவதற்கு பார்ப்பனர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை காரணம் பார்ப்பன சொம்பு வேலையில் கிச்சாவுக்கு 200 வருட சீனியர் டேபரய்யா குரூப் ஆகையால் பார்ப்பனர்கள் முக்குலத்தோரை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை
நேற்று கிச்சா தன் முகநூல் பதிவில் லாவகமாக ஜாதி பிரச்சனை என்கிற வார்த்தையைத் தவிர்த்து தன் சமூகம் சிறுபான்மையாக உள்ள இடங்களில் இது போன்ற பிரச்சினை வருகிறது என்று மலுப்பி இருக்கிறார்
சிறுபான்மை சமூகம் என்பது தான் பிரச்சனை என்றால் பார்ப்பனர்கள் மீது ஏன் வன்முறை நடத்தப்படுவதில்லை
சரி சில திகவினர் பார்ப்பனர்களின் பூனுல் அறுத்த போது இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று பொங்கி எழுந்த அர்ஜுன் சம்பத் இப்போது எங்கே
கிச்சா சமூகம் இந்துவாகத் தெரியவில்லையா அர்ஜுன் சம்பத்திற்கு
தமிழ் ஜாதி என்று சீமான் பேசுவதும் இந்து ஒற்றுமை என்று அர்ஜுன் சம்பத் பேசுவதும் பாண்டிய வம்சம் என்று கிருஷ்ணசாமி பேசுவதும் பல கலர்களில் விற்கப்படும் பார்ப்பன கம்பெனி ஜட்டிகள் தான்
தமிழ் ஜாதி இந்து ஒற்றுமை ஆண்ட பரம்பரை என்கிற மூன்றையும் நாம் சுருக்கமா பார்ப்பனிய அரசியல் என்று சொல்லலாம்
அதன் தலைவர்கள் சீமான் கிருஷ்ணசாமி அர்ஜுன் சம்பத்

No comments: