Tuesday, May 29, 2018

கார்புரேட்-கார்புரேட் விளம்பரங்களும்- பார்பனியமும்


கார்புரேட்-கார்புரேட் விளம்பரங்களும்- பார்பனியமும்

நம் நாட்டை பொறுத்தவரை கார்புரேட் கம்பெனிகளும் பார்பனியமும் இரண்டும் வெவ்வேறு அல்ல ஒன்றோடொன்று பின்னி பிணைந்தவையாகும். பார்ப்பனியத்தை அகற்றினால் கார்புரேட் கம்பெனிகள் நிலைத்து நிற்காது, கர்புரேட் கம்பெனிகளை அகற்றினால் பார்ப்பனியம் நிலைத்தது நிற்காது.

இதை நன்கு உணர்ந்த பார்ப்பனர்கள் தீவிர வலது சாரி சிந்தனையுடையவர்களாகவே இருப்பார்கள் சிந்தனையில் சிறு பிசையும் இன்றி அனைத்து பார்ப்பனர்களும் கார்புரேட் கம்பெனிகளுக்கு ஆதரவு என்கின்ற ஒரு புள்ளியில் இணைவது என்பது ஆச்சர்யம் அல்ல அது அவர்களுடைய இயல்பான குணம். ஆம் உடல் உழைப்பு வேலை செய்து பழக்கம் இல்லாதவர்கள் வெறும் சூழ்ச்சி சிந்தனையில் முன்னேறியவர்களுக்கு கார்புரேட் ஒரு வரப்பிரிசாதமாகவே கருதுவார்கள்.

அதன் வெளிப்பாடே ஸ்டெர்லைட் கம்பெனிக்கு எதிராக போராடும் நம் மக்களை கொச்சைப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் அனைவரும் பார்பனர்களாகவும் பிஜேபி கட்சி காரர்களாகவுமே உள்ளனர் மக்களை பற்றி துளியும் அக்கறை கொள்ளாமால் சுயநலமாகவும், சூழ்ச்சியால் எப்படி முன்னேறுவது என்பது போன்ற குணமே பார்ப்பனிய தத்துவம்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்த்து போராடும் மக்களை கொச்சைப்படுத்தி பதிவிடுபவர்களை சாதாரணமாக கடந்து சென்று, ஆலையை துடங்கி வைத்தது திமுகவா, ஆதிமுகாவ என்ற விவாத வலையில் மக்களை சிக்கவைப்பதில் உள்ளது பார்ப்பனியத்தின் வெற்றி.

கார்புரேட் விளம்பரங்களில் பார்ப்பனியம்

பெரும்பாலான விளம்பரங்களில் பார்ப்பநியத்தை மைய படுத்தியே நம்மால் காண முடியும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் விடு விற்கும் விளம்பரம் ஒன்று ஒளிபரப்ப பட்டது அதில் mr &mrs iyer என்ற வாசகத்தோடு வெளியிட்டனர் கடும் எதிர்ப்புக்கு பிறகு mr&mrss ஐயர் என்ற வாசகத்தை எடுத்து  விட்டனர் ஏனெனில் இது பெரியார் மண்.
இருப்பினும் இது மறைமுகமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதையும் நாம் மறுத்து விட முடியாது.
அப்படி மறைமுகமாக ஆதிக்கத்தை நிறுவமுயலும் சிலவற்றை நான் எடுத்துவைக்க உள்ளேன்.

கார்புரேட் விளம்பரங்களில் பார்ப்பனியத்தை நான் மூன்று வகையாக பார்க்கிறேன்.
1)விற்பனை பொருள் மீது பார்ப்பனியம்
2)மண்ணின் மைந்தர்களை கவ்ட்டவர்களாக சித்தரிப்பது
3)பார்ப்பனிய பண்பாட்டை சிறந்தது என காட்ட முற்படுவது

முதல் வகை
விற்பனை பொருள் மீது பார்ப்பனியம்

 வேதியல் கலந்த டூத் பேஸ்ட் முதல் இயற்க்கை மூலிகையால் செய்யப்பட்ட டூத் பேஸ்ட் விளம்பரங்கள் வரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இது மற்ற டூத் பேஸ்ட் விளம்பரங்களைவிட இது  முற்றிலும் மாறுபட்டது. வேதத்துடன் விஞ்ஞானம் என்று நேரடியாக பயன்டுத்தக்கூடிய பொருளின்மீது பார்ப்பனியத்தை திணித்து இருப்பார்கள். வேதமம் விஞ்ஞானமும் இரண்டும் இரு துருவங்கள் அப்படி இரண்டும் கலந்து ஒரு டூத்  பேஸ்ட்டை உருவாக்க முடியும் என்றால் அவர்களுடைய கூற்று படி பார்தால் வேதம் என்பது மாமிசங்களை எப்படி சமைத்து உண்ணுவது என்ற குறிப்பே வேதம் வேதத்துடன் விஞ்ஞானம் என்றால் நிச்சயம் அந்த டூத் போஸ்ட் அசைவம் தான்.
 https://youtu.be/2C7bVgg5LJ4

இரண்டாம் வகை
மண்ணின் மைந்தர்களை கேட்டவர்களாக சித்தரிப்பது

XUV500 CAR  விளம்பரம். ஒருநாள் மங்கோலியாவில் என்று ஆரம்பமாகும் இந்த விளம்பரதில் கதாநாயகன் கதாநாயகியை மோங்கோலிய மக்களிடம் இருந்து காப்பாற்றுவது போல விளம்பரம் அமைந்திருப்பார்கள் இதற்கும் உரிமைக்காக போராடும் மக்களை தீவிரவாதிகள் என்று அழைக்க படுவதற்கு எந்த வேறுபாடும் இல்லை இந்த விளம்பரத்தை ரேசிச கண்ணோட்டத்தில் பார்க்கலாம்
https://youtu.be/f8Uh3DtEOcE


மூன்றாம் வகை
பார்ப்பனிய பண்பாட்டை  சிறந்தது என காட்ட முற்படுவது

இது ஒரு நகை விளம்பரம் இதில் முக்கிய கதாபாத்திரமே நமது வேங்கை மவனின் சொந்தமான ஒய் ஜி மகேந்திரன்தான்  தான் அணிந்திருக்கும் பூணூலை எப்படியாவது காட்டியே தீர வெண்டும் என்ற முடிவோடு விளம்பரத்தில் நடித்திருப்பார் இப்படி கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் அனைத்திலும் பார்ப்பனியத்தை உயர்த்தி பிடிப்பதில் உள்ளது பார்ப்பனியத்தின் வெற்றி.
https://youtu.be/CI_aWyTZu3A

இப்படி 100க்கு 90 சதவீதம் பார்ப்பன சுவடுகள் இல்லாத விளம்பரங்களை பார்ப்பது மிகவும் அரிது
இப்பொழுது புரிகிறதா பார்ப்பனர்களுக்கு கார்புரேட் கம்பெனிகளுக்கு உள்ள தொடர்பு.
 இவை அனைத்தையும் நாம் சாதாரணாமாக கடந்து விடுகின்றோம்.
நான் இந்த கட்டுரை எழுத காரணம் இந்த பார்ப்பன ஆதிக்க திமிரை அறிந்தும் நானும் கடந்து போவது நான் ஏற்ற கொள்ளகைக்கு செய்யும் துரோகமாகும்.

பார்ப்பனியம் எப்பொழுதும் ஒரு ஒட்டுண்ணி வகையை சேர்ந்தது..எது ஆதிக்கம் செலுத்துகிறதோ அதோடு ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழும்.
இன்று முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்துகிறது அதனால் முதலாளித்துவத்துடன் ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழ்கிறது.

No comments: