Tuesday, May 29, 2018

பச்ச சிரிப்புக்காரர்கள்

பச்ச சிரிப்புக்காரர்கள்


 எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியில் சேர்ந்த அல்லது எம்ஜிஆரால் சேர்க்கப்பட்ட செல்வி ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவர்களை எவ்வளவு கீழ்த்தரமாக பேசமுடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசக்கூடியவர்.வயது,அரசியல் அனுபவம், கொண்ட எவரையும் செல்வி ஜெயலலிதா விட்டு வைத்ததில்லை.மேனாள் பிரதமர் நரசிம்மராவ்  ஆக இருந்தாலும்,திமுக தலைவர் கலைஞராக இருந்தாலும்.
நாவலராக இருந்தாலும் எதிர்த்து பேசக்கூடியவர் செல்வி ஜெயலலிதா என்பதை நாம் அறிவோம். இதனால் செல்வி ஜெயலலிதாவை பலர் தைரிய சாலி என்று கூட  சொல்லுவார்கள்.  பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது கூட அவ்வளவு சீக்கிரத்தில் ஜெயலலிதா முகத்தில் சிரிப்பை  பார்க்கமுடியாது. பொது நிகழ்ச்சிகளில் அவர் விழுந்து, விழுந்து சிரிக்கிறார் என்றால் நாலாந்தர பேச்சாளர்கள் யாராவது தலைவர் கலைஞர் அவர்களையும்,கலைஞர் அவர்களது குடும்பத்தையும் இழிவாக பேசும்போது மட்டுமே! தான் எப்படிப்பட்ட வன்மம் உடையவர்,மோசமானவர் என்று வெளிப்படையாக காட்டிக்கொள்வார்.
 ஆனால் இன்றைய முதல்வர்கள் ஓபிஸ்,இபிஸ் இருவரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை,யாரையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யமாட்டார்கள்.மேடயில் சக அமைச்சர்களுக்கு நாற்காலி போடுவார்கள்,அருகருகே உட்கார வைப்பார்கள்.மற்ற அமைச்சர்களை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பேச அனுமதிப்பார்கள்.அவ்வளவு நல்லவர்கள் போல காட்டிகொள்வார்கள்.கிராமங்களில் பேச்சுவழக்கில் அவன் பச்சை சிரிப்புக்காரன் அவனை நம்பக்கூடாது என்பார்கள். அதே போலத்தான் ஓபிஸ்,இபிஸ்- ம்.பச்சை சிரிப்பு சிரித்து சசிகலா காலில் சாஷ்டங்கமாக வீழ்ந்து சின்ன அம்மா, சின்னம்மா என்று நடித்து
முதல்வர் பதவியை பெற்றுக்கொண்டு அமைதிப்படை அமாவாசை போல் சசிகலாவை அப்புறப்படுத்தியவர்கள் ஆம் பச்ச சிரிப்புக்காரர்கள்.நல்லவர்கள் போல் காட்டிக்கொள்வார்கள்,அறவழியில்போராடும் தமிழர்களை குருவி சுடுவது போல் சுட்டு  பொசுக்கி
தமிழ்நாட்டை பிஜேபிக்கு காட்டிக்கொடுப்பார்கள்.

*பச்ச சிரிப்புகாரர்கள்
தமிழர்கள் பார்த்து நடந்து கொள்ளுங்கள்*

No comments: