Wednesday, January 03, 2018

தலைவர் கலைஞரின் புகழ்

கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை, மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை, வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை, கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை. தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை, பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை, தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை , தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும், பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும், நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை, கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை
ஆனால் இது அத்தனையும் நடந்தது , அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் ஒருவர் இருந்தார். சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர்.
எந்த உயரிய தொழில்நுட்பமும் தமிழகத்தில்தான் அறிமுகப் படுத்தப்பட்டது, சென்னை ஆட்டோமொபைல் நகரமாக மாற்றப்பட்டது. சமத்துவபுரம் அமைக்கப்பட்டது, குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது, நீர்நிலைகள் தவறாமல் தூர்வாரப்பட்டது, காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்கு, சொத்துரிமை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் மகளிர் குழுக்கள் வரை அமைக்கப்பட்டது.
இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி , ஆட்சி தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள், உங்களுடன் அந்தக் கட்சிக்காக கொடி பிடிக்கிறேன், கோஷம் போடுகிறேன்.
அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும் , அவரை கொண்டாடுவதும்தான் எனக்கு வேலை,எங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள் காட்டி மகிழ்வது உதயசூரியனையும் தலைவர் கலைஞரையும்தான்.
வாழ்க கலைஞர் , வளர்க தமிழகம்.

No comments: