Friday, January 05, 2018

RSS ஆதரவு மனநிலை கொண்டவர்கள் யார் யார்?

1) நீட் தேர்வை ஆதரிப்பவர்கள்
2) இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள்
3) ஆணவக்கொலைகளை ஆதரிப்பவர்கள். குறிப்பாக சங்கர் கொலை தீர்ப்பு வந்தபொழுது கௌசல்யாவை திட்டியவர்கள்.
4) மாடு புனிதமானது, பஞ்ச கவ்யம் எயிட்ஸ், கேன்சர் நோய்களை குணப்படுத்தும் என்று சொல்பவர்கள்.
5) குழந்தைகளுக்கான நோய் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்துகளை எதிர்ப்பவர்கள்.
6) அருந்ததியர் போன்ற மிகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள்.
7) போக்குவரத்து ஊழியர் போன்ற தொழிலாளர் போராட்டங்களின் போது அவர்கள் மீது வன்மத்தை கக்கி தனியார்மயப்படுத்த வேண்டும் என்று சொல்பவர்கள்.
8.) மொடியின் பணமதிப்பழிப்பை ஆதரித்தவர்கள்.
9) சாதி ரீதியான கொலைகள், மதரீதியான கலவரங்களை ஆதிக்கத்தை பெரிய பிரச்சனையாக சொல்லாமல் ஊழல்தான் பெரிய பிரச்சனை என்று சொல்பவர்கள்.
10) குஜராத் தமிழகத்தைவிட வளர்ந்த மாநிலம் என்று பொய் சொல்பவர்கள்.
11) ஒருவரின் திறமையும் குணமும் சாதி அடிப்படையிலானது என்று நம்புபவர்கள்.
12) இந்தி படிக்காததால் வளர்ச்சியடையவில்லை என்று சொல்பவர்கள்.
13) சிறுபான்மை மத மக்கள் மீது எப்பொழுதும் வெறுப்பை விதைப்பவர்கள்.

No comments: