Sunday, January 07, 2018

பகுத்தறிவு இல்லாத பதர்களாத் தானே இருக்கான் எல்லாவனும்

6:00 மணிக்கு ஒரு பெல் சத்தம், “காலை ஆறு மணி” அப்டீன்னு ஒரு வாயிஸ், அதை தொடர்ந்து புனித பைபிள்ள இருந்து ஒரு வசனம் சத்தமா கேட்டுது. எங்க ஊர் சர்ச்ல இருக்கிற பெரிய க்ளாக் டவர்ல உச்சியில ஆட்டோமெட்டிக் அலாரம் க்ளாக் இருக்கு. அதுல இருந்து தான் டெய்லி இந்த சத்தம் வருது. இனி 12 மணிக்கும் சாயங்காலம் 6 மணிக்கும் கூட கேக்கும்னு மம்மி சொன்னாவ.
சரியா 7:00 மணிக்கு கொஞ்சம் வித்தியாசமா மறுபடியும் கேட்டுது. ஆனா இந்த முறை கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா டைப்ல ஒரு ஸ்லோகம் வந்துது. இது ஏதுன்னு விசாரிச்சா, பக்கத்துல ஒரு இந்துக்கோவில்லயும் இப்ப சேம் செட்டப் வச்சிருக்கானுவளாம். கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்ன கிறித்தவ சர்ச்கள்ள ஏற்படுத்தப்பட்ட இந்த அலாரம் சிஸ்டத்தை இப்ப இந்துக் கோவில்கள்ளயும் கடைபிடிக்கானுவ.
இப்டிதான் குமரி மாவட்டத்துல உள்ள மதவாத கிருத்திருமித்தனத்தை எல்லாம் தொடங்கி விட்டு மக்கள் மனசு பகுத்தறிவு அடைஞ்சிராம பார்த்துக்கிறதுல முன்னோடிகள் இந்த மாவட்டத்துல 80%க்கும் அதிகமா இருக்கிற தென்னிந்திய கிறித்தவ சபையினர் தான். இவனுவள பார்த்து இந்து முன்னணிகாரனுவளும் எழுச்சி அடைஞ்சிருக்கானுவ.
ரோட்டுல பெரிய பெரிய ஸ்பீக்கர் கட்டி வச்சி மதப்பாடல்களை முழங்கி விடியற்காலையிலேயே குழந்தைகள் படிப்பை கெடுக்கிறது முதல், ஆவிக்குரிய எழுச்சி கூட்டங்கள் நடத்தி நைட் மக்களை நிம்மதியா உறங்க விடாம இருக்கிறது வரை அம்புட்டு அநியாயத்தையும் தொடங்கி விடுவானுவ இந்த கிறித்தவ பயலுவ. அதுக்கப்புறம் அதையே ஃபாலோ பண்ணி இந்துப்பயலுக செய்யிறது. இவன் கிறிஸ்மஸ்னு சொல்லி ஒரு மாசம் கொன்னா, அவன் பிள்ளையார் சதுர்த்தின்னு சொல்லி 10 நாள் சாவடிப்பான்.
கடந்த டிசம்பர் 24ம் தேதியும் 25ம் தேதியும் நைட் பூரா பாட்டு போட்டு முழங்கினானுவ. நான் தூங்க முடியல, public nuisanceன்னு சொல்லி, போலீஸ்க்கு போன் பண்ணப்போறேன்னு நின்னப்போ எங்க வீட்ல உள்ளவங்க எல்லாம் சேர்ந்து தடுத்து நிறுத்திட்டாங்க. லீவுக்கு வந்து நாலு நாள் நிக்கிறப்போ பிரச்சனை வேண்டாம்னு கடும் கோவத்தோட வீட்டுக்காரவுங்க கிட்ட சத்தம் மட்டும் போட்டுட்டு பல்லக்கடிச்சி சகிச்சுகிட்டேன்.
செரி, இம்புட்டு தெய்வபக்தியோட இருக்குறியே, அப்பறம் ஏண்டா உங்க மாவட்டத்துல ஓகி புயல் அடிச்சு இம்புட்டு அழிவு? “உன்னை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை” அப்டீன்னு உங்க பைபிள் சொல்லுதே, அப்டி கண்ணுமூடாத உங்க கடவுள் நோவாகிட்ட “இனிமே நான் பூமியை தண்ணீரால் அழிப்பதில்லை” அப்டீன்னு வாக்குறுதி குடுத்தது உண்மைன்னா, அவுருக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தா, எதுக்குடா இப்டி இயற்கை சீற்றம் அடையிறப்போ உங்களையும் உங்க சொத்துக்களையும் உங்க கர்த்தர் (ராமரும் அல்லாவும் கூட பிசியா இருந்திருப்பாக போல) பாதுகாக்கல? யோசிங்கடா டேய்!
இந்த மாதிரி ஸ்பீக்கர் கட்டி முழங்கி பொது மக்களுக்கு இடையூறு செய்யிற மதவாதத்தை தட்டி கேக்க யாராச்சும் இருக்காவளான்னு கேட்டா ஒரு பயலும் இல்ல. கேட்டா 100% படிப்பறிவுள்ள மாவட்டமாம். என்னத்த படிச்சு என்னத்த பிரயோஜனம்! பகுத்தறிவு இல்லாத பதர்களாத் தானே இருக்கான் எல்லாவனும்! இதச்சொன்னா நம்மள... 😷😷

No comments: